RECENT NEWS

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

BIG STORIES

முகநூல் பழக்கம்.. ஒரே நாளில் மீண்டும், தீராத ஆசையால் கொலை.. காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்

Jun 29, 2025 06:49 AM

271

முகநூல் பழக்கம்.. ஒரே நாளில் மீண்டும், தீராத ஆசையால் கொலை.. காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்

“கடலினில் மீனாக இருந்தவள் நான்... உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்” என வீட்டை தாண்டி வந்த முகநூல் காதலி... “ஒருநாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்... உனை நான் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா...” - என்ற காதலன், என முகநூலில் பழகிய உடன், தனிமையில் சந்தித்துக்கொண்ட காதலர்களுக்குள் நடந்த பயங்கரம் குறித்து, விவரிக்கிறது இந்த கிரைம் திரில்லர் செய்தி தொகுப்பு...

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், ஹொசகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயது பிரீத்தி. இவருக்கு, திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளனர். பிரீத்தி, ஹாசனில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.

அடிக்கடி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்ததாக கூறப்படும் பிரீத்தி, கடந்த 19 ஆம் தேதி இரவு வழக்கம்போல் முகநூலில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா கரோடி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது அதாவது தன்னைவிட குறைவான புனித் என்ற வாலிபர் முகநூலில் ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தார். உடனே அவருக்கு பிரீத்தி, நண்பர்களாக இணைய விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை, சற்று நேரத்தில் புனித் ஏற்றார். இதையடுத்து இருவரும் இரவு முழுவதும் ‘ஹஸ்க்கி எழுத்தில்’ சாட்டிங் செய்துள்ளனர்.

மறுநாள் காலை பிரீத்தியை, புனித் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், கடந்த 21 ஆம் தேதி நேரில் சந்திக்க பிரீத்தி அழைப்பு விடுத்தார். அதன்பேரில், அவர்கள் இருவரும் கடந்த 22 ஆம் தேதி ஹாசனில் நேரில் சந்தித்தனர். புனித் தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு ஹாசனுக்கு வந்துள்ளார். அதுபோல், பிரீத்தி தனது தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்திருந்தார்.

இருவரும் நேரில் சந்தித்த பின்னர், தன்னை காரில் எங்காவது தூரமாக அழைத்துச் செல்லுமாறு புனித்திடம், பிரீத்தி கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்பேரில் புனித், பிரீத்தியை மைசூருவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, இருவரும் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர், அங்கிருந்து மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை அருகே உள்ள ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். அப்போது இருவரும் அன்பை பறிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், மீண்டும் பிரீத்தி ‘அன்புக்காக’ அழைத்துள்ளார். ஆனால், அதற்கு புனித் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு பிரீத்தி கேட்டுள்ளார். இதனைதொடர்ந்து பிரீத்தியை கே.ஆர்.பேட்டை அருகே கத்தரகட்டே வனப்பகுதிக்கு புனித் காரில் அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் மீண்டும் புனித்தை, பிரீத்தி ‘அன்புக்கு’ அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு புனித் மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த புனித், பிரீத்தியை சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும், அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து பிரீத்தியின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த பிரீத்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, பிரீத்தியின் உடலை, காரில் எடுத்துக் கொண்டு புனித், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு, பிரீத்தியின் உடலை வீசிய புனித், அவரது உடலில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரீத்தி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த அவரது கணவர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், போலீசார் பிரீத்தியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது, அந்த அழைப்பை எடுத்து புனித் பேசியுள்ளார். அவர் பேசும்போது, “நான் வாடகை கார் டிரைவர் பேசுகிறேன். பிரீத்தி எனது காரில் பயணிக்கும்போது செல்போனை மறந்து விட்டுச் சென்றுவிட்டார்” என்று கூறிவிட்டு தலைமறைவாகியுள்ளார், புனித்.

இதையடுத்து, கே.ஆர்.பேட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த புனித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொடுத்த முதற்கட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இப்படியொரு தகவல் தற்போது வைரல் ஆகி கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், புனித்தின் வாக்குமூலம், 1984 ல் வெளியான ‘விதி’ படத்தில் நாயக வில்லன் மோகன் நீதிமன்றத்தில் கொடுக்கும் வாக்குமூலத்தைப் போலவே இருக்கிறது, எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.

விதி படத்தில் மோகன் நீதிமன்றத்தில், “ராதா என்னை பீச்சு கூட்டிக்கிட்டு போனா, போனேன். கடல்ல குளிக்கலாம்னு சொன்னா, எனக்கு நீச்சல் தெரியாதுன்னு சொன்னேன். திடீர்ன்னு புடிச்சு என்னை அலையில தள்ளிட்டா. அவளும் என் மேலம் விழுந்துட்டா. என் துணியெல்லாம் நனைஞ்சுடுச்சு. இந்த ஈரத்துணியோட எப்படி வீட்டுக்கு போறதுன்னு கேட்டேன். பக்கத்துலேயே ஹோட்டல் இருக்கு, அங்க ஒரு ரூம் எடுத்து துணியை எல்லாம் காயவெச்சுட்டு அப்புறமா போலாம்னு சொல்லி, கூட்டிக்கிட்டு போனா. ஒரு ரூம் குள்ள போனதும் கதவை மூடி தாழ்ப்பா போட்டுட்டா. பட்டுன்னு புடவை அவுத்து போட்டுட்டு...என்னை ஒரு மாதிரியா பார்த்தா. எனக்கு வெட்கமா இருந்தது, திரும்பி நின்னுக்கிட்டேன். அவ சிரிச்சுக்கிட்டே இந்த காலத்திலும் இப்படியொரு மக்கு புள்ளையான்னு சொல்லிக்கிட்டே ... சொல்லிக்கிட்டே... என்னை இறுக்கி புடிச்சுக்கிட்டா... கன்னத்துல கழுத்துல எங்க பார்த்தாலும் முத்தம் கொடுத்துட்டா. நான் அப்படியே பயந்து அவளை தள்ளிட்டு வெளியே ஓடிவந்துட்டேன்...” இப்படித்தா, இருந்திருக்கிறது புனித்தின் முதற்கட்ட வாக்குமூலம்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்களில் பரவை முனியம்மா போன்ற பாட்டிகளைக்கூட விட்டு வைக்காமல்... ஹாய் டோலி, நைஷ் டோலி, சாட்டையடி பதிவு டோலி, உங்க புரைஃபைல் பிக்சர் சூப்பர் டோலி என்றெல்லாம் வலை வீசும் ஜொள்ளன் மத்தியில் அந்த இளம்பெண்ணே ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்ததாகவும், அவரே தூரமாக அழைத்து செல்ல சொன்னதாகவும் அவரே ஹோட்டலுக்கு அழைத்து சென்றதாகவும் அவரே யாருமில்லா காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்ல சென்றதாகவும் அவரே மீண்டும் மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்ததாகவும் கூறும் புனித்தின் வாக்குமூலம் அவ்வளவாக நம்பும்படியாக இல்லை. அவ்வளவு நல்ல பிள்ளையாக இருந்தால், முகநூலில் பழகியவுடன், அவர் அழைத்தவுடன் ஏன் காரை எடுத்துக் கொண்டு ஜொள்ளிளித்தபடி பிரீத்தியை பார்க்கச் ஓடவேண்டும்? ப்ரீத்தி தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தியிருக்கலாம். ஆனால், ஆசை தீர்ந்த புனித் அதற்கு மறுத்திருக்கலாம். அதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இப்படியொரு படுகொலை நிகழ்ந்திருக்கலாம். இதெல்லாம், அடுத்தடுத்த விசாரணையில் வெளிவரும் என்கிறார்கள், கர்நாடக காவல்துறையினர், கண்சிமிட்டியபடி.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies