RECENT NEWS

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

முகப்பு

அந்த 78 நாட்கள் கொடுமை.. அவங்க மதிக்க மாட்டாங்க.. பெண்ணின் கண்ணீர் ஆடியோ..!

Jun 29, 2025 12:41 PM

372

அந்த 78 நாட்கள் கொடுமை.. அவங்க மதிக்க மாட்டாங்க.. பெண்ணின் கண்ணீர் ஆடியோ..!

அந்த 78 நாட்கள் கொடுமை.. அவங்க மதிக்க மாட்டாங்க.. பெண்ணின் கண்ணீர் ஆடியோ..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காருக்குள் தென்னை மரத்திற்கு பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தக்கூடிய மாத்திரையை உட்கொண்டு புதுப் பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (27) இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமாகியுள்ளது.

இதற்கிடையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவிநாசியில் இருந்து காரை ஓட்டி வந்த ரிதன்யா மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள்ளேயே விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த சேவூர் போலீசார் காருக்குள் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் ஆகி 78 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டதால் ரிதன்யாவின் மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா, கண்ணீர் மல்க உருக்கமாக பேசி, தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய ஆடியோ வெளியாகி உள்ளது.

அதில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் மாமனார் மாமியார் தன்னை சித்திரவதை செய்ததாகவும்,இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது என்றும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என்றும் தனது இந்த முடிவுக்கு யார் யாரெல்லாம் காரணம் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு ரிதன்யாவுக்கு மாமியார் வீட்டில் நடந்த கொடுமைகள் என்ன என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies