RECENT NEWS

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

முகப்பு

25 வயது இளைஞர் போலீஸ் விசாரணையில் பலியானது எப்படி ?மீண்டும் ஒரு சாத்தான்குளம் கொடுமையா?

Jun 30, 2025 06:10 AM

138

25 வயது இளைஞர் போலீஸ் விசாரணையில் பலியானது எப்படி ?மீண்டும் ஒரு சாத்தான்குளம் கொடுமையா?

திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.

கடந்த வெள்ளி கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி என்ற மூதாட்டி தனது மகளான டாக்டர் நிக்கி (48) என்பவருடன் காரில் சாமி கும்பிட வந்துள்ளார்.

சிவகாமியின் பத்து பவுன் தங்க நகைகளை கழட்டி பர்சில் வைத்து கட்டைப்பையில் துணிகளுக்கு அடியில் பத்திரமாக இருக்கும்படி காரில் வைத்துள்ளார்.

கோயில் வாசலில் சிவகாமிக்கு வீல் சேர் தேவைப்படுவதாக கோயில் அலுவலகத்தில் நிக்கி கூறியுள்ளார். இதனையடுத்து கோயில் தற்காலிக ஊழியர் அஜித் (27) என்பவர் வீல்சேர் கொண்டு வந்துள்ளார்.

சிவகாமி வீல் சேரில் ஏறிய உடன் நிக்கி வீல்சேரில் கோயிலுக்கு சென்றுள்ளார். காரை அஜித்திடம் கொடுத்து பார்க்கிங் செய்து விட்டு வருமாறு கூறியுள்ளார். காரை எடுத்து சென்ற அஜித் நீண்ட நேரம் கழித்து கார் சாவியை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

அம்மனை தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பும் போது பின்புறம் பார்த்த போது காரின் பின் சீட்டுக்கு அடியில் இருந்த கட்டைப்பை வெளியில் இருந்ததுடன் துணிமணிகளும் சிதறி கிடந்தன. பர்சில் வைத்திருந்த பத்து பவுன் தங்க நகைகளும் மாயமாகி இருந்தன.

இதை அடுத்து மீண்டும் திரும்பி வந்து கோயில் தற்காலிக ஊழியர் அஜித்திடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதனையடுத்து நிக்கி மற்றும் கோயில் ஊழியர்கள் அஜித்தை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் அஜித்திடம் வெள்ளி முதல் சனிக்கிழமை மாலை வரை விசாரணை செய்து வந்தனர் . இரவு 7 மணி அளவில் கோவில் ஆபீஸ் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை விசாரணையின் போது அஜித் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்ததால் காவல் துறையினர் அஜித்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அங்கிருந்து சிவகங்கையில் உள்ள மணிவண்ணன் என்ற தனியார் மருத்துவமனைக்கு ரகசியமாக ஆர்ஆர் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

காவல்துறையினர் வேகவேகமாக ரகசியமாக அங்கிருந்து இறந்த அஜித்தின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது

போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்த சம்பவம் அறிந்து இளைஞரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

இதற்கிடையே இறந்த அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்றும் அதனால் தனது நண்பர் அருண்குமாரிடம் கார் சாவியை கொடுத்து இருவரும் காரை பார்க்கிங்கில் நிறுத்த சென்றதாக கூறபடுகின்றது.

இந்நிலையில் இது சம்பந்தமாக சம்பவத்தன்று இரவு குற்றப்பிரிவு காவல் துறையினர், கோவிலில் பணியில் இருந்த பிரவீன் குமார்,அருண்குமார் , வினோத் குமார் நவீன் குமார் மற்றும் இறந்த அஜித் குமார்
ஆகிய ஆறு பேரையும் விசாரிக்க அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விசாரணையின் போது , அஜித் குமார் கடுமையாக தாக்கப்பட்டதால் காயம் அடைந்ததாகவும், அதனால் உடனடியாக எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் மற்றவர்களை காவல்துறையில் விடுதலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

மடப்புரம் கிராமத்து மக்கள் போலீசாரை கண்டித்து முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் இளைஞர் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதாக கூறி, அனைத்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர்.

இதை அடுத்து இளைஞர் அஜித்குமாரை அழைத்து விசாரித்த போது தாக்கிய புகார் குள்ளான, திருபுவனம் குற்றப்பிரிவு காவலர்கள் ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோவிலின் பின்புறம் உள்ள உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அஜித் குமாரை தாக்கிய உடைந்த பைப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே திருபுவனம் காவல்நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் நீதிபதியின் ஆய்வு அறிக்கைகள் பின்னரே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் ஆறு பேர் கைது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் அஜித் குடும்பத்தினரிடம் சமாதானம் பேசிய அதிகாரிகள், நீதிபதி முன்பு கொண்டு செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், அதிமுக நாம் தமிழர் த. வெ. க உள்ளிட்ட கட்சியினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி காவலாளி அஜித்தின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜஸ்டிஸ் பார் அஜித் என்ற கேஸ் ஸ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies