முகப்பு
300 சவரன் போதாது.. 200 சவரன் வாங்கி வா.. 24 மணி நேர பாலியல் கொடுமை..! புதுப்பெண் உயிரிழப்பில் திடுக்
Jun 30, 2025 10:40 AM
748
300 சவரன் போதாது.. 200 சவரன் வாங்கி வா.. 24 மணி நேர பாலியல் கொடுமை..!
திருப்பூர் மாவட்டம், சேயூரில் தந்தைக்கு ஆடியோ அனுப்பி விட்டு காரிலேயே புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் கணவன், மாமனார் மாமியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்து திராவிட மக்கள் கட்சி சார்பாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டவர்.
இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதியருக்கு ரிதன்யா என்ற மகளும், மிதுன் ஆதித்யா என்ற மகனும் இருந்தனர்.
மகள் ரிதன்யாவிற்கு, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி - சித்திராதேவியின் மகன் கவின்குமாருடன் வரன் பேசி முடிக்கப்பட்டது.
கவின்குமாருக்கும், ரிதன்யா விற்கும் கடந்த 11.04.2025 அன்று திருப்பூரில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து அவிநாசியை அடுத்து பழங்கரையில் உள்ளவீட்டில் புதுமண தம்பதியர் குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று பிற்பகல் அவிநாசியை அடுத்து சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் செட்டிபுதூர் பகுதியில் சாலையோரம் காருக்குள் ரிதன்யா வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், ரிதன்யாவின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேயூர் போலீசார் காரில் இருந்த ரிதன்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தை அண்ணாதுரைக்கு உருக்கமாக பேசி வாட்சப்பில் பல ஆடியோக்களை அனுப்பிஇருந்தார்.
அந்த ஆடியோக்களில் , கணவன் கவின்குமார் தன்னை உடல் ரீதியாக கடுமையாக சித்தரவதை செய்வதாகவும், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து மன ரீதியாக கடுமையாக சித்திரவதை செய்வதாகவும், எனது இந்த முடிவிற்கு எனது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்தரா தேவி ஆகியோர்தான் காரணம், அவர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்றும் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
முன்னதாக ரிதன்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது கணவர் கவின்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு, வீட்டில் வைத்து தான் செய்த செக்ஸ் டார்ச்சர்கள் குறித்து வெளியில் சொன்னால், அவமானத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்த ரிதன்யா, சேயூர் சென்று அங்கு தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை வாங்கி வந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில் காரில் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
திருமணம் ஆகி 78 நாட்களில் புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், திருப்பூர் ஆர்டிஓ மோகனசுந்தரம்,விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ரா தேவி ஆகியோரை ரிதன்யாவின் தம்பி மிதுன் ஆதித்யா மற்றும் உறவினர்கள் ஆத்திரத்துடன் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் இருந்து தப்பித்து மூவரும் காரில் ஏறி அரசு மருத்துவமனையை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் சென்ற காரை உறவினர்கள் தட்டி கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை அடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி, அவிநாசி - சத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ரிதன்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெண்ணின் வீட்டார் கூறுகையில், திருமணத்தின் போது பெண்ணின் வீட்டில் 500 சவரன் தருவதாக கூறி 300 சவரன் வரை நகை போட்டுள்ளனர்.
70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், திருமணம் நடைபெற்ற 10 நாட்களில் இருந்து கணவரின் தாய்,தந்தை ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 சவரன் நகை இன்னும் தரவில்லை என்று திட்டி சித்தரவதை செய்து வந்ததாகவும், மூன்று பேர் அமர்ந்திருக்க தன்னை ஒரு மணி நேரம் நிற்க வைத்து மனரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், கவின் குமார் குடும்பத்திற்கு வாடகை போன்ற மாதாந்திர இதர வருமானம் மட்டும் 20 லட்சம் ரூபாய் இருந்ததாகவும், இதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு முழுநேரம் கவின்குமார் பெண்ணுக்கு உடல்ரீதியாக பாலியல் கொடுமைப்படுத்தியதாகவும் பெண் வீட்டார் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட எஸ்.பி. கிரீஷ்குமார் யாதவ் கூறுகையில், 194 பி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், வெளியான ஆடியோக்கள் அடிப்படையாக வைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதன்படி கணவன் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி , மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu