RECENT NEWS

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

முகப்பு

வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட மருமகள்: மாமனார் செய்த கொடூரம்!

Jun 30, 2025 01:58 PM

180

வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட மருமகள்: மாமனார் செய்த கொடூரம்!

வீட்டு வாசலில் புதைக்கப்பட்ட மருமகள்: மாமனார் செய்த கொடூரம்!

காணவில்லை என புகார் கொடுக்கப்பட்ட பெண் .. கணவர் வீட்டு முன் புதைக்கப்பட்ட அதிர்ச்சி.. பெற்றவர் ஸ்தானத்தில் இருந்தவரே செய்த கொடூரம்.. என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தனு (24), இவர் ஹரியானாவைச் சேர்ந்த அருண் சிங் (28), என்பவரை கடந்த 2023ல் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே, தனுவின் கணவர் அருண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக் கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அந்த கொடுமை தாங்க முடியாமல், தனு தனது தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.

அதையடுத்து ஓராண்டுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், தனுவிடம் சமாதனம் பேசி,வரின் பெற்றோர்கள் மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும் அங்கு நிலைமை ஏதும் மாறவில்லை. தொடர்ந்து கணவர் வீட்டில் தனுவிற்கு கொடுமைகள் தொடர்ந்தன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, தனு வீட்டிற்கு கால் செய்த அருண், “ உங்களது மகள் காலையிலிருந்து காணவில்லை.. எங்கு போனாள் என தெரியவில்லை என கூறி காலை காட் செய்திருக்கிறார். அதனை கேட்டு பதறிய தனுவின் பெற்றோர், உடனே அருண் வீட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது யாருக்கும் தனு பற்றி ஏதும் தெரியவில்லை.

இதனால் மேலும் கவலையடைந்த தனுவின் பெற்றோர், மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என கூறியிருக்கின்றனர்.

ஆனால் அதற்கு அருணின் பெற்றோர், ”இந்த விவாகாரம் வெளியே தெரிந்தால் தங்களது குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும்” என கூறி தடுத்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு உணவு கொடு உறங்க வைத்துள்ளனர்.

பின்னர் காலையில் எழுந்த தனுவின் பெற்றோர் தங்களுக்கு உணவில் மயக்க மருந்துகொடுத்திருப்பதை அறிந்துகொண்டனர்.

அதையடுத்து தங்களது மகள் மாயமானத்திற்கு, அருண் குடும்பம் காரணமாக இருக்கலாம் என சந்தேகமடைந்த அவர்கள் உடனே அங்கிருந்து புறப்பட்டு, காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார், தனுவை 2 மாதங்களாக தொடர்ந்து தேடிவந்தனர்.

இதற்கிடையே, அருண் வீட்டின் முன்பக்கம் கால்வாய் பணிக்காக, பல்லம் தோண்டப்பட்டு, பின் அது கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்தது. இது போலீசாருக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, அருணின் தந்தை மற்றும் தாயிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்தியதில், உண்மை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது.

திருமணத்தின்போது, வருதட்சனையாக கொடுக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை கூடுதலாக, மருமகள் தனு வீட்டில் அருண் சிங் தாய் கேட்டபோது, பின்னர் தருவதாக தனு குடும்பம் கூறியிருக்கிறது.

இதனால் தாங்கள் எதிர்ப்பார்த்த வரதட்சனை கிடைக்காததால், அருண் குடும்பம் தனு மீதும் அவரின் குடும்பத்தின் மீது அதிருப்தியில் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அருண் மற்றும் அவரின் குடும்பத்தினர் தனுவிடம் அவ்வப்போது, சண்டையிட்டு, அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் தாய் வீட்டிற்கு சென்ற தனு பின், சமாதனம் செய்துவைக்கப்பட்டு மீண்டும் அருண் வீட்டிற்கு அனுப்பட்டார்.

ஆனால் அருணின் குடும்பம், நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தால், நிறைய வரதட்சனை வாங்கலாம் என கணக்குபோட்டிருந்தனர்.

இந்த நிலையில், தனு வீட்டிற்கு மீண்டும் வந்ததால், அதிர்ச்சியடைந்த அருண் மற்றும் அவரது குடும்பம் தனுவை தீர்த்துகட்ட ஏப்ரல் 14ஆம் தேதி திட்டம் போட்டுள்ளனர்.

சம்பத்தன்று ஏப்ரல் 21 ஆம் தேதி உறவினர் திருமனத்திற்கு செல்வதாக அருணின் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து, கணவர் அருண் தனுவிற்கும், அவரது தங்கை காஜலுக்கும் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் தனு மேல் தளத்திலும், காஜல் கீழ் தளத்தில் உள்ள அறைகளில் தூங்க சென்றபோது மயக்கமடைந்தனர்.

அதையடுத்து, தனுவின் அறைக்கு சென்ற அவரது மாமனார் பூப் சிங், கொலை செய்வதற்கு முன், தனது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.அந்த நேரத்தில் அவர் இந்த செயலை தனது மனைவியிடமோ அல்லது மகனிடமோ தெரிவிக்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் மருமகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தனது மகனை மாடிக்கு அழைத்திருக்கிறார். அதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து, இறந்த தனுவின் உடலைச் சுற்றி வைத்து, வீட்டிற்கு வெளியே உள்ள தெருவில் ஏற்கனவே தோண்டப்பட்ட ஒரு குழியில் வீசி மூடியுள்ளனர்.

தனுவை கொலை செய்து புதைப்பதற்காக முன் கூடியே திட்டமிட்டு, 10 அடி ஆழத்திற்கு குழியை வெட்டிவைத்திருக்கின்றனர்.

இருப்பினும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, கழிவுநீர் அகற்றும் பணிக்காக குழி தோண்டப்பட்டிருப்பதாக, அக்கம்பக்கத்தினரிடம் கூறி நம்ப வைத்திருக்கின்றனர். பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, உடல் வைக்கப்பட்ட பகுதி மீது கான்கிரீட் ஸ்லாப் போட்டிருகின்றனர்.

இந்த நிலையில், கான்கிரீட்டை உடைத்து, உள்ளே தோண்டியபோது அங்கு, பாதி அளவுக்கு மேல் சிதைந்த நிலையில் இருந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல் தனுதான் என அடையாடம் காணப்பட்ட நிலையில், பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாமனார் பூப் சிங், மாமியார் ஆகியோரை கைதுசெய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் கணவர் அருண் சிங்கை தேடிவருகின்றனர்.

பணம், நகை என மருமகள் வீட்டிலிருந்து சுருட்டியது போதவில்லை என்று, பேராசையில், மேலும் மேலும் பணம் கேட்டு வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை கொடுமை செய்தது மட்டுமின்றி, அவளை குடும்பமே ஒன்று சேர்ந்து, கொலை செய்துவிட்டு, பின் அவள் காணவில்லை என நாடகமாடியவர்களுக்கு சிறைதான் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்...

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies