BIG STORIES
திமுக கொடி போட்ட காரில் பெரியவரை கடத்தி விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்..! பரபரப்பான ஆடியோ வெளியானது
Jul 01, 2025 01:15 AM
66
திமுக கொடி போட்ட காரில் பெரியவரை கடத்தி விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல்..!
5 லட்சம் ரூபாய் கடனுக்கு வியாபாரியின் தந்தையை , திமுக கொடி போட்ட காரில் கடத்திச்சென்று 65 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி கும்பல் ஒன்று அவரது கை விரலை வெட்டி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் 71 வயதான நடராஜன் இவரது மகன் மணிகண்டன் இவர்கள் அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். மணி கண்டன் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதற்காக சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரிடம் 15 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக தெரிய வருகிறது. அண்மையில் 10 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்த நிலையில் மீத முள்ள 5 லட்ச ரூபாயை மாதம் 50 ஆயிரம் வட்டியுடன் 6 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கூறி உள்ளார் மணிகண்டன்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த பழனிச்சாமி தரப்பினர் உடனடியாக தன்னிடம் வாங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு 67 லட்ச ரூபாயை தர வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிய வருகிறது. அதனை கொடுக்க முடியாததால் மணிகண்டன் தனது தந்தை நடராஜனுடன், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் திமுக கொடி கட்டிய காரில் அங்கு வந்த பழனிச்சாமி ஆதரவாளர்கள் , வீட்டில் இருந்த மணி கண்டனின் தந்தை நடராஜனை காரில் இழுத்துபோட்டு கடத்திச்சென்றதாக கூறப்படுகின்றது. கடத்திச்சென்றவர்கள் மணிகண்டனுக்கு போன் செய்து, உனது தந்தை உயிரோடு வேண்டுமென்றால் 65 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்து விட்டு கூட்டிட்டு போ என்றும் அப்படி கொடுக்க வில்லை என்றால் அவரை சித்ரவதை செய்து கொலை செய்து விடுவதாக கூறி உள்ளனர்
தாங்கள் கேட்டபடி பணத்தை தரவில்லை என்றால் நடராஜனை கட்டிபோட்டு நாய் போல நாக்கால் தண்ணீர் குடிக்க வைப்போம் என்று கொடூரமாக மிரட்டி தாக்கியது ஆடியோவால் அம்பலமானத
இதையடுத்து மணிகண்டன் தனது தந்தை கடத்தப்பட்டது குறித்து மயிலாடுதுரை மாவட்ட ஆட்சிதலைவரிடம் புகார் அளித்தார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நடராஜன் மகள் சீர்காழியில் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடத்தல் கும்பலின் கார் சீர்காழியில் இருந்து , கடலூர் மாவட்டம் காரைக்காடு பகுதிக்கு வருவதாக தெரியவந்த நிலையில் கடலூர் முதுநகர் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். அவர்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது திமுக கொடியுடன் வந்த கடத்தல் கும்பலின் கார் சிக்கியது. காருக்குள் இருந்த நடராஜன் காயங்களுடன் மீட்கப்பட்டார். கடத்தல் கும்பல் அவரை மிரட்டுவதற்காக விரல்களை வெட்டி இருப்பது தெரியவந்ததால் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதால், குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக பிரதிநிதி பாண்டியன் , பன்னீர்செல்வம் , தேவநாதன் , மரிய செல்வராஜ், சக்திவேல் ஆகிய ஐந்து பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய பாண்டியனின் கார் பறிமுதல் செய்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu