BIG STORIES
சீக்ரெட் காதலுக்கு சிக்கல் சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச் தலையணை மந்திரத்தால் கொலை..! செல்போன் பேச்சு... வாழ்க்கையே போச்சு..!
Jul 01, 2025 01:39 AM
111
சீக்ரெட் காதலுக்கு சிக்கல் சிங்கப்பூரில் இருந்து ஸ்கெட்ச் தலையணை மந்திரத்தால் கொலை..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கணவனை கொலை செய்து விட்டு குடி போதையில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய பெண்ணை 3 மாதங்கள் கழித்து செல்போன் பேச்சு விவரங்களை வைத்து போலீசார் கைது செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 17ந்தேதி குடி போதையில் வீட்டிற்கு வந்த விஜயன், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறி காலையில் அவரது மனைவி வெண்ணிலா கதறி அழுதார்.
வெண்ணிலாவின் நடவடிக்கை சரியில்லை என்றும் விஜயனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கணவரை பறிகொடுத்து விட்டு ஒரு பெண் குழந்தையுடன் தவிப்பதாக வெண்ணிலா அழுது புலம்பியதில் அவரிடம் போலீசாரல் தொடர்ந்து விசாரிக்க இயலவில்லை
பிணகூறாய்வு அறிக்கையில் விஜயன், மது அருந்தி இருந்தது உறுதியானது. அவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவே பிணகூராய்வு அறிக்கையும் வந்தது உடலில் வேறு காயங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து விஜயனின் சடலம் பிணக்கூறாய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வெண்ணிலாவின் நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். குறிப்பாக அவர் யார் யாரிடம் செல்போன் மூலம் பேசுகிறார் ? என்பதை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் குறிப்பிட்ட எண்ணில் பலமுறை வெண்ணிலா பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எண் அதே ஊரை சேர்ந்த சஞ்சய் என்பவரின் செல்போன் என்றும் அவர் தற்போது சிங்கப்பூரில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து யார் இந்த சஞ்சய் ? என்று விசாரித்த போது, விஜயன் உயிரோடு இருந்த சமயம் , வெண்ணிலாவுடன் , சஞ்சய் பேச்சுவார்த்தையாக இருந்ததாகவும், இதனை கண்டித்து ஊரார் சத்தம் போட்ட நிலையில் சஞ்சய் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வெண்ணிலாவின் செல்போன் தொடர்புகளை விரிவாக ஆய்வு செய்த போது, விஜயன் உயிரிழந்த அன்றும் அதற்கு முன்பாகவும் சஞ்சய் பல முறை வெண்ணிலாவுடன் செல்போனில் பேசி இருப்பதையும் கண்டுபிடித்தனர். இதனை ஆதாரமாக கொண்டு வெண்ணிலாவை விசாரணைக்கு அழைத்த போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது கணவர் விஜயனை கூலிப்படை மூலம் கொலை செய்ததை வெண்ணிலா ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமும் மூக்கு முட்ட மது குடித்து விட்டு வந்து விஜயன் தூங்கி விடுவதால் , வெண்ணிலாவுக்கு சஞ்சய் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தடுத்து தங்கள் காதலை ஊரார் பிரித்தாலும் , சஞ்சய் சிங்கபூர் சென்ற பின்னரும் தொடர்ந்து செல்போன் மூலம் சீக்ரெட் காதல் நீடித்துள்ளது. காதலுக்கு இடையூராக இருக்கும் விஜயனை தடயமே இல்லாமல் தீர்த்துக்கட்ட சிங்கப்பூரில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளான் சஞ்சய்
சம்பவத்தன்று போதையில் தூங்கிக் கொண்டிருந்த விஜயனை, சஞ்சய் திட்டப்படி , வெண்ணிலாவின் வீட்டிற்குள் புகுந்த சஞ்சய் அனுப்பிய 4 பேர் தலையணையை முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர். இரவு முழுவதும் கணவரின் சடலத்துடன் விழித்திருந்த வெண்ணிலா காலையில் எழுந்து கணவர் மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக கூறி நாடகமாடியது விராணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து வெண்ணிலா, சபரி வாசன், அழகிரி, சக்திவேல் மற்றும் 16 வயது சிறுவன் என ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கொலைக்கு மூளையாக செயல்பட்ட சிங்கப்பூர் காதலன் சஞ்சய் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu