முகப்பு
திருப்புவனம் அருகே கோவில் காவலாளி உயிரிழப்பு சம்பவத்தில் தனிப்படையைச் சேர்ந்த 5 போலீசார் கைது...
Jul 01, 2025 04:02 AM
75
திருப்புவனம் அருகே கோவில் காவலாளி உயிரிழப்பு சம்பவத்தில் தனிப்படையைச் சேர்ந்த 5 போலீசார் கைது...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் கோவில் பாதுகாவலர் அஜித்குமார் மரண வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்த தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் திருப்புவனம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், அஜித்குமார் மரணம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், கோயிலுக்கு வந்திருந்த பெண் ஒருவர் தனது காரை பார்க்கிங் செய்வதற்காக அஜித்குமாரிடம் சாவியை கொடுத்துச் சென்ற நிலையில் அதிலிருந்த ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதால் தீர விசாரிக்குமாறு டி.எஸ்.பி மற்றும் காவல் ஆய்வாளர் கூறியுள்ளனர்.
அதன்படி, அஜித்குமாரிடம் விசாரித்த போது அவருக்கு வலிப்பு ஏற்படவே மருத்துவமனையில் சேர்த்தபோது இறந்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu