சற்றுமுன்
காவல் மரண வழக்கில் கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் தர்ணா
Jul 01, 2025 07:46 AM
59
காவல் மரண வழக்கில் கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் தர்ணா
உயரதிகாரிகள் கூறியதை கேட்டே இளைஞர் அஜித்தை தங்களது கணவர்கள் தாக்கியதாகக்கூறி கைதான 5 காவலர்களின் குடும்பப் பெண்கள் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
நகைத் திருட்டு வழக்கின் விசாரணையின்போது இளைஞர் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியான நிலையில் கொலை வழக்குப்பதிவு செய்து கண்ணன், பிரபு, ஆனந்த் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், காவலர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது குடும்ப பெண்கள், குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயரதிகாரிகள் உத்தரவின்பேரிலேயே அஜித்தை காவலர்கள் தாக்கியதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவலர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu