RECENT NEWS

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

BIG STORIES

" ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா.. " துரத்திவிட்ட ஒத்தப்புள்ள.. பரிதவித்த பெற்றோர்!

Jul 30, 2025 02:21 PM

129

" ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா.. " துரத்திவிட்ட ஒத்தப்புள்ள.. பரிதவித்த பெற்றோர்!

ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா, ஒத்த புள்ள பெத்தாங்களே அது யாரு ஒங்க அப்பா, பொத்தி பொத்தி வளர்த்தாங்க பாசத்த காட்டி, நிலா வாங்கி தாரேன்னாங்க சாதத்த ஊட்டி, நடந்து பழக சொன்னாங்களே நட வண்டி ஓட்டி, மவராசா நீதான்னாங்க அம்பானியாக்கி... என தவமாய் தவமிருந்து பெற்று, ஆடிப்பாடி வளர்த்த அம்மா -அப்பாவை நடுத்தெருவில் கண்ணீரோடு தவிக்கவிட்ட அந்த ஒத்த புள்ளையின் செயல்தான், பலரையும் பரிதவிக்கவைத்திருக்கிறது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்லையா - மனைவி சண்முகத்தாய். இந்நிலையில், வயதான இத்தம்பதி கண்ணீரோடு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் மகன் ஒரே மகன் செல்லத்துரை தங்கள் சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்கி விட்டதாகவும், தற்போது சாப்பாடு எதுவும் கொடுக்காமல் துரத்தி அடித்து விட்டதாகவும் கூறி கண் கலங்கிய படி கூறினர்.

சட்டையில்லாமல், வயிறு ஒட்டிய தேகத்துடன் இதுகுறித்து, செல்லையா மேலும் கூறும்போது, “எனது 15 ஏக்கர் நிலத்தை எனது மகன் எழுதி வாங்கினார். அப்போது என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

ஆனால், சொத்தை எழுதிக் கொடுத்த பிறகு மகனும் மருமகளும் சேர்ந்து எங்களை வெளியே துரத்தி விட்டு விட்டார்கள். தற்போது, நிலத்திற்கு சென்றால் உள்ளே வரக்கூடாது என்று மருமகள் கம்பால் அடிக்க வருகிறாள். எனக்கு சாப்பாடு போடவில்லை. சாப்பாட்டுக்கும் வழி இல்லாமல் மகள் வீட்டில் வசிக்கிறோம். எனவே, எங்களது சொத்துக்களை மீட்டு தர வேண்டும்” என கண்ணீரோடு தெரிவித்தது, காண்போரை கலங்க வைத்தது.

இதுகுறித்து செல்லையாவின் மனைவி சண்முகத்தாய் கூறும்போது, “பெற்ற மகன் என்பதால் சொத்தை எழுதிக் கொடுத்தோம். இப்போது எங்கள் இடத்துக்கு சென்றால், மருமகள் அரிவாளால் வெட்ட வருகிறார்.

மகன் கண்முன்னே மருமகள் எங்களை கொலை செய்ய வருகிறார். எங்களுக்கு சாப்பாடும் போடவில்லை வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுக்கவில்லை. இதனால், வீதியில் இருக்கிறோம். எனவே, நாங்கள் எழுதிக் கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து சொத்துக்களை எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும்” என தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி.. மினி பஸ் டிரைவர் செய்த கொடூரச் செயல்.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies