குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
Aug 02, 2025
BIG STORIES
“நீங்க அழகா இருக்கீங்க.. மடியில் படுக்கவா..” என்று நகை பறித்த கொள்ளையன்..! பறந்து போனது பெண்கள் பாதுகாப்பு
Jul 30, 2025 04:17 PM
210
“நீங்க அழகா இருக்கீங்க.. மடியில் படுக்கவா..” என்று நகை பறித்த கொள்ளையன்..! பறந்து போனது பெண்கள் பாதுகாப்பு
சென்னை பெருங்குடி பறக்கும் ரெயில் நிலையத்தில் ஆசிரியையிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட கொள்ளையன், அவரது தாலி சங்கிலியை பறித்துச்சென் ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த பெருங்குடி ரயில் நிலையத்தில் எப்போதும் போதிய பாதுகாப்பு இருப்பதில்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வரும் பள்ளி ஆசிரியை ஒருவர், தினமும் தான் பணிபுரிந்து வரும் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு பறக்கும் ரயிலில் சென்று வருவது வழக்கம். 29ந் தேதி மாலை பணி முடிந்ததும் அந்த ஆசிரியை வீட்டிற்கு செல்வதற்காக பெருங்குடி ரயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார்.
அப்போது சிலீவ்லெஸ் பனியன் போட்ட மர்ம ஆசாமி ஒருவன் அந்த ஆசிரியை அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவரை ஈவ் டீசிங் செய்ததாக கூறப்படுகின்றது . அவனை கண்டித்த ஆசிரியை அங்கிருந்து எழுந்து வேறு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தார்.
மீண்டும் ஆசிரியை அருகிலேயே சென்று அமர்ந்த அந்த மர்ம ஆசாமி, கண்இமைக்கும் நேரத்தில் ஆசிரியை கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து கொண்டு ஓடினான். ஆசிரியை கூச்சலிட்டு பார்த்தும் ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை இது குறித்து திருவான்மியூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரயில்வே போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சர்வ சாதாரணமாக பட்டப்பகலில் நகை பறித்து செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அந்த நபர் தப்பிச் சென்று பறக்கும் ரயில் ஏறி சென்றதை கண்டறிந்தனர். உடனே மற்ற ரயில் நிலையங்களையும் போலீசார் கண்காணித்தனர்.
சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய கொள்ளையன் , திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நடந்து செல்வது தெரியவந்தது. ரெயில்வே போலீசாரின் தகவலை ஏற்று திருவல்லிக்கேணி போலீசார் அவனை மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவன் திருவான்மியூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். ரயில்வே போலீசார் விசாரணையில், அவன் விழுப்புரத்தைச் சேர்ந்த பாபாஜி என்கிற சவுந்தர் என்பதும் தெரிந்தது. இவன் மீது மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், கைதான சவுந்தர் பெருங்குடி பறக்கும் ரயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ஆசிரியை அருகில் சென்று தான் பிஏ படித்துள்ளதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறிய பாபாஜி, நீங்க அழகாக இருக்கீங்க , உங்கள் மடியில் படுத்து கொள்ளவா ? என்று ஈவ் டீசிங் செய்ததாக கூறப்படுகின்றது.
உடனே ஆசிரியை வேறு இடத்திற்கு சென்று அமர்ந்துள்ளார். பின் தொடர்ந்து சென்று பேச்சுக் கொடுத்த சவுந்தர் கண் இமைக்கும் நேரத்தில் ஆசிரியையிடம் நகையை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சென்னையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையோடு ஒரு சில பறக்கும் ரயில் நிலையங்கள் காணப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு பிறகாவது அங்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.
அதேவேளையில், ரயில் நிலையத்தில் சிசிடிவி இயங்கும் நிலையில் இருந்ததால் செயின்பறிப்பு திருடனை சம்பவம் நடந்த மறுநாளே கைது செய்யுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu