RECENT NEWS

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

தமிழ்நாடு

“திருப்பாச்சி அரிவாள... வேட்டையாடும் கூட்டமடா..” தடகள வீரர் தடம் மாறியது எப்படி பெண்ணின் தந்தையான எஸ்.ஐ கைது

Jul 31, 2025 01:16 AM

285

“திருப்பாச்சி அரிவாள... வேட்டையாடும் கூட்டமடா..”
 தடகள வீரர் தடம் மாறியது எப்படி பெண்ணின் தந்தையான எஸ்.ஐ கைது

“திருப்பாச்சி அரிவாள... வேட்டையாடும் கூட்டமடா..” தடகள வீரர் தடம் மாறியது எப்படி பெண்ணின் தந்தையான எஸ்.ஐ கைது

நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண்ணின் தந்தையான சஸ்பெண்டு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர். தடகள வீரர் தடம் மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
பெருமை பேசும் பாடல்களால் உந்தப்பட்டு கையில் அரிவாள், கத்தி ஏந்தியதால் தற்போது கொலை வழக்கில் சிக்கி கம்பி எண்ணி வருகின்றார் தடகள வீரர் சுர்ஜித்..!

நெல்லை கே.டி.சி நகரில் வைத்து ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கவின் காதலித்த பெண்ணின் சகோதரனான தடகள வீரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் காவல் உதவி ஆய்வாளர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சுர்ஜித்தின் தாய் தந்தையை கைது செய்தால் தான் , தனது மகனின் உடலை வாங்குவேன் அதுவரை நீதிக்காக போராடுவேன் என்று கவினின் தந்தை தீர்க்கமாக சொன்ன நிலையில் அமைச்சர்கள் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத், உள்ளிட்டோர் கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் அங்கு இருந்தார்

அமைச்சர்களின் ஆறுதலை ஏற்றுக் கொண்டாலும், சுர்ஜித்தின் தாய் தந்தையை கைது செய்யவேண்டும் என்றும் தனது மகனின் சாவுக்கு நீதி கிடைக்காமல் உடலையும் உதவியையும் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறி விட்டதால் அனைவரும் அங்கிருந்து ஆலோசித்துவிட்டு வருவதாக கூறி புறப்பட்டுச்சென்றனர

இதற்கிடையே கவினின் கொலைக்கு நீதி கேட்டு அவர் சார்ந்த சமுதாய பெண்கள் தூத்துக்குடி - திரு நெல்வேலி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிஐஜி சந்தோஷ், எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்ய உத்தரவிட்டார்

கைது செய்ய முயன்றபோது தங்கள் ஆடைகளை பெண் போலீசார் இழுத்ததாக கூறி மறியலில் ஈடுபட்ட பெண்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை தவிர்த்து சாலையோரம் அப்புறப்படுத்தி கலைந்து போகச்செய்தனர். அபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுர்ஜித்தின் தாய் தந்தையை கைது செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என்று எச்சரித்தனர்

இந்த நிலையில் நெல்லை காவல் ஆணையரகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், அமைச்சர்கள், உயர் காவல் அதிகாரிகள் நடத்திய ஆலோசனையின் முடிவில் கவின் கொலை வழக்கில் சஸ்பெண்டு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்ததாக அறிவித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சரவணனை ஆகஸ்ட் 8ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுர்ஜித் , பட்டப்படிப்பு முடித்த தடகள வீரர் என்றும் ஏராளமான பதக்கங்கள் கோப்பைகள் வென்றவர் என்றும் கூறப்படுகின்றது. சுர்ஜித் தனது இன்ஸ்டாகிராமில் கையில் வீச்சரிவாளுடன், கத்தியுடனும், வேட்டையாடும் கூட்டமடா... என்று சினிமா பாட்டுக்கு ரீல்ஸ் பதிவிடும் போதே தட்டி வைத்திருந்தால் படுபாதக செயலை செய்ய சுர்ஜித் யோசித்திருப்பான் என்கின்றனர் சரவணனுடன் பணியாற்றும் காவல்துறையினர்.

எல்லாவற்றுக்கும் மேல் சம்பவத்தன்று கவினை கொலை செய்த கையோடு சுர்ஜித் தனது தந்தை சரவணனை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறி இருக்கிறார். அன்று நெல்லையில் உள்ள வீட்டில் இருந்த சரவணன் தனது மகனை அழைத்துக் கொண்டு போய் காவல் நிலையத்தில் சரண் அடைய வைத்ததால் தான் அவரது தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்திருப்பதாக கவின் தரப்பினர் குற்றச்சாட்டினர்.

மகளின் சாதி கடந்த காதலும், மகனின் விபரீத செயலும் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணனை கொலை வழக்கில் சிக்கவைத்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி.. மினி பஸ் டிரைவர் செய்த கொடூரச் செயல்.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies