RECENT NEWS

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

BIG STORIES

நியாயம் கேட்ட பெண்ணின் செல்போனை உடைத்ததாக தாலுகா ஆபீஸில் ஆவேசம்..! பெண்ணைக் கண்டு மிரண்டபோலீசார்

Jul 31, 2025 01:58 AM

230

நியாயம் கேட்ட பெண்ணின் செல்போனை உடைத்ததாக தாலுகா ஆபீஸில் ஆவேசம்..! பெண்ணைக் கண்டு மிரண்டபோலீசார்

நியாயம் கேட்ட பெண்ணின் செல்போனை உடைத்ததாக தாலுகா ஆபீஸில் ஆவேசம்..! பெண்ணைக் கண்டு மிரண்டபோலீசார்

 ,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் , தனது சொத்துக்கான பட்டாவில் வேறு நபர்களின் பெயர் எப்படி வந்தது ? என்று கேள்வி எழுப்பி வீடியோ எடுத்த பெண்ணின் செல்போன் உடைக்கப்பட்டது. இதனை கண்டித்து தாலுகா அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

50 வருடம் தனக்கு சொந்தமான பூர்வீக சொத்தில் புதிய நபர்களின் பெயர் எப்படி வந்தது ? என்று நியாயம் கேட்டதால் தனது செல்போன் உடைக்கப்பட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் ஆவேசமான காட்சிகள் தான் இவை..!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார் . அதில் 50 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய பட்டா எனது பெயரில் நீண்ட காலமாக உள்ளது. இந்த நிலம் சம்பந்தமாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனக்கு எந்த ஒரு முன்னறிவிப்போ, சட்டப்படி நோட்டீஸோ வழங்காமல் சில நபர்களின் பெயர்களை அந்த பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளது, அதனை நீக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இது போன்று பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் . அப்பொழுது பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் தன்னிடம் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், தனது செல்போனை பிடுங்கி உடைத்து எறிந்ததாக கூறி ரேணுகாதேவி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார்

தகவல் அறிந்து சம்பவ இடத்து வந்த போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்ற நிலையில், 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது எனக்கூறி தனக்கு செல்போன் வேணும் என்று ஆக்ரோசமாக சத்தமிட்டதால் போலீசார் மிரண்டு போயினர்

தாலுகா அலுவலக ஊழியர்களோ தங்களுக்கு தெரியாது என்று நடந்து கொண்டதால், தனது செல்போனை உடைத்ததை பொதுமக்கள் பலரும் பார்த்தனர் , துணை தாசில்தாரை கைது செய்யுங்கள் என்று ரேணுகாதேவி போலீசாரிடம் அழுதபடியே முறையிட்டார்

புகார் அளித்தால் நடவடிக்கை அளிப்பதாக கூறிய போலீசார் பெண் போலீசாரை வரவழைத்து , செல்போனுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ரேணிகாதேவியை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

ரேணுகாதேவி புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர் . உடைத்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு போலீசார் அறிவுருத்தியதன் பேரில் செல்போன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி.. மினி பஸ் டிரைவர் செய்த கொடூரச் செயல்.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies