குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
Aug 02, 2025
BIG STORIES
"குடும்ப மானம் தான் எங்களுக்கு முக்கியம்".. இளைஞனுக்கு HIV தொற்று.. அக்கா - மாமா சிக்கியது எப்படி?
Jul 31, 2025 01:38 PM
153
கர்நாடகா மாநிலம் ஹோலல்கெரே தாலுகாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் கடந்த 23 ஆம் தேதியன்று, ஹிரியூர் தாலுகாவில் உள்ள NH48 தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அந்த இளைஞருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தாவண்கரே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிப்பட்டுள்ளார். விபத்து ஏற்பட்ட தகவலை அறிந்த இளைஞரின் குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
காயம் காரணமாக அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், மருத்துவர்கள் அந்த இளைஞனுக்கு இரத்த பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அவருக்கு HIV தொற்று இருப்பது தெரியவந்தததாக கூறப்படுகிறது
உடனே மருத்துவர் இளைஞரின் சகோதரியான நிஷாவிடம் இதுகுறித்து தெரிவித்து, வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 25 ஆம் தேதியன்று, நிஷாவும், அவரது கணவர் மஞ்சுநாத்தும் தனியார் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து காயமடைந்த இளைஞரை மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மறுநாளே அவர் இறந்துவிட்டதாக, அவரது உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
வீட்டில் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த உறவினர்கள் இறந்த இளைஞனின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டறிந்தனர். இதனால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே இதுகுறித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது நிஷா, தனது தந்தையை தனியாக அழைத்து சென்று தம்பியை நாங்கள் தான் கொலை செய்தோம் என தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிஷாவின் தந்தை, இதுகுறித்து ஹோலல்கெரே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் நிஷாவை கைது செய்து விசாரித்தபோது, தனது தம்பிக்கு HIV தொற்று இருப்பது வெளியே தெரிந்தால் தனது குடும்ப மானமே போய்விடும் என்றும் , அதுமட்டுமில்லாமல் தன்னோட தாய், தந்தைக்கு சுகர், பிரசர் போன்ற வியாதிகள் இருப்பதால் அவர்களுக்கும் தம்பி மூலமாக HIV பரவலாம் என நினைத்து, நானும் என் கணவரும் சேர்ந்து போர்வையால் கழுத்தை நெரித்து கொன்றதாக நிஷா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கொலைக்கு உடந்தையாக இருந்த நிஷாவின் கணவர் மஞ்சுநாத் தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆனால் தனது மகளும் மருமகனும் சொத்துக்கு ஆசைப்பட்டுதான் மகனை கொலை செய்ததாக நிஷாவின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu