RECENT NEWS

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

திருப்பதி லட்டுக்கு வயசு 310.. இதயம் இனிக்கவைக்கும் சு(வை)வாரஸ்ய வரலாறு!

Aug 02, 2025

BIG STORIES

போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு.. டீல் பேசிய பரபரப்பு ஆடியோ; “மாட்டிக்கிட்ட பங்கு”த்தந்தைக்கு இதில் ‘பங்கு’ என்ன?

Jul 31, 2025 01:42 PM

103

போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு.. டீல் பேசிய பரபரப்பு ஆடியோ;  “மாட்டிக்கிட்ட பங்கு”த்தந்தைக்கு இதில் ‘பங்கு’ என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திகோடு பகுதியைச் சேர்ந்த சாதிக் ஜெட்லி என்கிற 20 வயது இளைஞரை, சைபர் கிரைம் வழக்கில் கைது அவரது வீட்டிற்கு சென்றபோது அவரது 80 வயது பாட்டி சூசை மரியாள் போலீசாரை தடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது போலீசார் தள்ளிவிட்டு மூதாட்டியை தாக்கியதில், கீழே விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள், குற்றம்சாட்டி உடலை வாங்காமல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

உடல் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக உறவினர்கள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், மாஜிஸ்திரேட் தலைமையில் உடல் கூறு ஆய்வு செய்யவும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்தநிலையில், மூதாட்டியின் மருமகள் சந்திரகலாவை தொடர்புகொண்ட மாத்திரவிளை வட்டார பங்கு தந்தை, செல்போனில் தொடர்பு கொண்டு, உடலை வாங்கா விட்டால் உங்களை யாரும் தாங்க மாட்டார்கள். போலீசார் உடல் கூறு ஆய்வு செய்து எங்காவது கொண்டு அடக்கம் செய்து விடுவார்கள்.

நீங்கள் கூறுவது எல்லாம் பொய் என அனைவரும் கூறுகிறார்கள். பொய்யோ சரியோ உங்கள் மகனின் வாழ்க்கையை போலீசார் தீர்த்து விடுவார்கள். இப்போது, நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் உங்கள் மகனின் வாழ்கையை அழித்து விடுவார்கள்.

பின்னர், சில நாட்கள் தாண்டி சமூக வலைதளங்களில் அந்த பெண்ணின் போட்டோவை உங்கள் மகன் போட்டது உட்பட பல வழக்குகளில் உங்கள் மகனை சேர்ப்பார்கள்” என போலீஸுக்கு ஆதரவாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த பாதிரியார் பேசும்போது, “சிறுவர்கள் சொல்வதை கேட்டு நடக்காதீர்கள்” என கூறுகிறார். அப்போது, “நீதிபதி தலைமையில் உடல் கூறு ஆய்வு செய்தால் வரலாம்” என்று மருமகள் கூறும்போது, “இந்த வழக்கில் அப்படி எல்லாம் செய்ய முடியாது. சிறுவர்கள் பேச்சை கேட்காதீர்கள்” என பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக உள்ளது அவரது பேச்சு.

அப்போது, மருமகளோ, “இரண்டு நாட்கள் ஆகி யாராவது துக்கம் விசாரித்தீர்களா? இப்போது போலீசுக்காக பேசுகிறீர்கள்?” என மருமகள் பேசியதும், பங்கு தந்தையோ “நீங்க வர்றீங்களா இல்லையா?” என ஆத்திரத்தோடு மிரட்டும் தொனியில் பேசிவிட்டு செல்போனை துண்டிக்கும் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், அந்த இளைஞன் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றதாகவும் அவர் அந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிடவில்லை என்றும் போலீஸார் பொய் புகாரில் கைது செய்யவந்ததாகவும் எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம் என மூதாட்டியின் மருமகள் பேசுவதாக அந்த ஆடியோ உள்ளது.

அப்படியென்றால், போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும்போது, பாதிரியார் ஏன் போலீஸாருக்கு ஆதரவாக மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்யவேண்டும்? அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சந்திரகலா தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி.. மினி பஸ் டிரைவர் செய்த கொடூரச் செயல்.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies