BIG STORIES
தாறுமாறு தண்ணீர் லாரியால் அப்பாவி உயிர்கள் பலி..! கட்டி வைத்து தோலை உரித்தனர்..! மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..
Jul 31, 2025 04:55 PM
93
தாறுமாறு தண்ணீர் லாரியால் அப்பாவி உயிர்கள் பலி..! கட்டி வைத்து தோலை உரித்தனர்..! மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..
சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த லாரி ஒன்று திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது.
அப்போது காலை 6.45 மணி அளவில் தண்ணீர் லாரியானது சென்னீர்குப்பம் - ஆவடி சாலையில் தாறுமாறாக சென்ற நிலையில், சாலை ஓரம் அமைந்திருந்த கடைகளின் மேற்கூரையின் மீது மோதியதோடு, சாலையில் ஓரம் 2 பைக்கில் சென்றுகொண்டிருந்த 3 பேர் மீதும் மோதியது. பின்னர் அந்த லாரி, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதி நின்றது.
லாரி மோதியதில் தனியாக பைக்கில் சென்றுகொண்டிருந்த 25 வயதான தனபால் என்பர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் திருவேற்காடு சுந்தர சோழபுரத்தை சேர்ந்த 40 வயதான தேவி என்பவர் சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், காலையில் வேலைக்கு செல்வதற்காக, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 52 வயதான கிருஷ்ணன் என்பவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். ஆனால் இருவரும் அந்த தண்ணீர் லாரி மோதியதில் விபத்தில் சிக்கினர்.
உடனே சம்பவத்தை பார்த்தவர்கள் பதறியடித்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து போலீசார், படுகாயமடைந்த கிருஷ்ணன், தேவி ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தேவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே லாரி மோதியதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆத்திரமடைந்து லாரி மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தனர். அப்போது லாரிக்குள் இருந்த க்ளீனர் உட்பட 3 நபர்களில் 2 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த 31 வயதான டிரைவர் அழகுராஜா மட்டும் அங்கிருந்தவர்களிடம் சிக்கியுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள், அழகுராஜாவை அங்கிருந்த கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அடித்து வெளுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் அழகுராஜாவை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் சேதம் அடைந்த வாகனங்களை அகற்றிவிட்டு, மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னை பேப்பர் மில்ஸ் சாலையில் தண்ணீர் லாரி மோதியதில் சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தண்ணீர் லாரி மோதி 2 உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu