RECENT NEWS

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

Aug 02, 2025

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

Aug 02, 2025

BIG STORIES

இந்தியாவுக்கு 25% வரி விதித்த டிரம்ப்.. 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்?

Jul 31, 2025 04:59 PM

92

இந்தியாவுக்கு 25% வரி விதித்த டிரம்ப்.. 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்?

அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு நேற்று 25% வரி விதித்த அதிபர் டிரம்ப், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒன்று என கடுமையாக விமர்சித்துள்ளார்... ஈரானிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்கும் 6 இந்திய நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளதால் இருதரப்பு இடையிலான வணிக உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இந்த வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்தியா தங்கள் நண்பராக இருந்தாலும் பல ஆண்டுகளாக அவர்களுடன் சிறிய அளவிலான வர்த்தகத்தையே மேற்கொண்டு வருவதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

உக்ரைனில் மேற்கொண்டு வரும் கொலைவெறித் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அனைவரும் விரும்பும் நேரத்தில், அந்த நாட்டிடமிருந்து தங்களுக்கு தேவையான ராணுவ உபகரணங்களை அதிக அளவில் இந்தியா வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சீனாவுடன் சேர்ந்த ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளதாகவும் குறிப்பிட்ட டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரியை அறிவித்தார்.

அதேபோல், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியா கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் டிரம்ப் 25 சதவீத வரியை அறிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த மத்திய அரசு, நாட்டின் பொருளாதார நலன்களை பாதுகாக்க உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் நியாயமான, சமமான மற்றும் பரஸ்பரம் நன்மை அளிக்கும் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இரு தரப்பு பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல், வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்பதால், அமெரிக்காவின் வரி விதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுகிறது.

இந்த சூழலில், ஈரானிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை வாங்கும் 6 இந்திய நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ்,ராம்னிக்லால் எஸ் கோசாலியா அண்ட் கம்பெனி, குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் ஈரானில் இருந்து மெத்தனால், டொலுயீன், பாலிஎத்திலீன் உள்ளிட்டவற்றை ஈரானிடம் இருந்து வாங்கி உள்ளன. கடந்த 2024 ஜனவரி முதல் இந்தாண்டு ஜனவரி வரை இந்த நிறுவனங்கள் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஈரானுடன் வர்த்தக தொடர்பை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவும், ரஷ்யாவும் அவரவரின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை ஒன்றாக சேர்ந்து மண்ணில் புதைத்துக் கொள்ளட்டும் என அதிபர் டிரம்ப் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிக தொடர்பு பற்றி தனக்கு கவலை இல்லை என குறிப்பிட்ட டிரம்ப், இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த வணிகத்தையே மேற்கொள்வதாகவும் கூறினார்.

இந்தியாவை நேரடியாக இன்று விமர்சித்த டிரம்ப், பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி மறைமுகமாக சாடியுள்ளார்.

பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பாகிஸ்தான் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்றும் அவர் கிண்டலாக தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாமி ஊர்வலத்தில் பைக் சாகசம்.. லவ்வர் பாயை வெளுத்த சம்பவம்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு..! 5 கிராமத்தினர் சாலை மறியல்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies