இந்தியா
ராப் பாடகர் வேடன் பாலியல் புகாரில் சிக்கினார்..! விடாது துரத்தும் சர்ச்சைகள்... பெண் மருத்துவர் சொன்னதென்ன?
Aug 01, 2025 04:43 AM
204
ராப் பாடகர் வேடன் பாலியல் புகாரில் சிக்கினார்..! விடாது துரத்தும் சர்ச்சைகள்...
சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பெயர் வேடன். யார் இந்த வேடன்? பாலியல் புகாரில் சிக்கிய பின்னணி என்ன? விரிவாக விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் முரளி என்ற இளைஞர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, யூடியூப் தளத்தில் "வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்" என்ற மியூசிக் வீடியோவை பதிவிட்டார்.
ராப் வடிவில் ஒடுக்குமுறை குறித்து மலையாளத்தில் பாடப்பட்ட அந்த பாடல், இணையத்தில் படு வைரலாக பரவியது. அதனை தொடர்ந்து ஹரிதாஸ் முரளி, தனது பெயரை வேடன் என மாற்றிக் கொண்டார்.
மியூசிக் கான்செர்டுகளில் வேடன் பாடிய வீடியோக்கள் அடுத்தடுத்து வைரலான நிலையில், மலையாளத்திலும், தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். அதிலும் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏராளமான போலீசார், வேடனை அழைத்து செல்லும் வீடியோவை அவரது ரசிகர்கள் பிஜிஎம் போட்டு இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் 'குத்தந்திரம்' என்ற பாடலையும், நரவேட்டை படத்தில் 'வாடா வேடா' என்ற பாடலையும் வேடன் எழுதி பாடியுள்ளார்.
தற்போது கோலி சோடா படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழில் இசைப்பாளராக வேடன் அறிமுகமாகவுள்ளார்.
ஒரு பக்கம் ரசிகர்கள், புகழ் என இருந்தாலும் மற்றொரு பக்கம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 2021-ஆம் ஆண்டு வேடனுக்கு எதிராக ‘மீ டூ’ பாலியல் புகார் முன்வைக்கப்பட்ட போது தன் தவறை ஒப்புக்கொண்ட வேடன் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி வேடனை கொச்சியில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் எர்ணாகுளம் பெரும்பாவூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றம் வேடனுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் தற்போது கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் திருக்காட்கரை காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் வேடனோடு தான் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமானதாக குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தன்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்ற வேடன், அத்துமீறி பாலியல் வன் கொடுமை செய்ததாகவும், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இளம் பெண் மருத்துவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வேடனுக்கு சம்மன் அனுப்பி, காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu