இந்தியா
பிரபல நடிகையின் அழகுக்கு பின் இருக்கும் கொடூர முகம்.. சிதைத்து போன இளைஞரின் கனவு!
Aug 01, 2025 06:49 AM
300
பிரபல நடிகையின் அழகுக்கு பின் இருக்கும் கொடூர முகம்.. சிதைத்து போன இளைஞரின் கனவு!
எப்போதும் அழகு முகத்துடன் கேமராவுக்கு போஸ் கொடுக்கும் நடிகை, இப்போது கேமராக்களை கண்டதும் ஓட்டம் பிடிக்க காரணம் என்ன? புகழ் வெளிச்சத்தில் சுற்றிவந்த நடிகை... இப்போது சிறை இருட்டில் தள்ளப்பட்டதற்கு காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்...
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை நந்தினி காஷ்யப். இவர் ருத்ரா என்கிற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 25ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் குவஹாத்தி பகுதியில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் தனது காரை ஓட்டிச் சென்றிருக்கிறார் நடிகை நந்தினி.
அப்போது குவஹாத்தி நல்பாரி பாலிடெக்னிக் மாணவரான சாமியுல் ஹக், தனது குடும்ப வறுமை காரணமாக நகராட்சியில் பகுதி நேரமாக பணிபுரிந்துவந்தார்.
சம்பவதன்று தகிங்காவ்ன் பகுதியில் பணி செய்துகொண்டிருந்தபோது, சாமுவேல் ஹக் மீது நடிகை நந்தினியின் கார் மின்னல் வேகத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சாமுவேல் ஹக், ரத்த வெள்ளத்தில் துடித்து அலறி இருக்கிறார். ஆனால் நடிகை நந்தினி விபத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, காயமடைந்த இளைஞருக்கு உதவுவதற்கு பதிலாக, துளியும் மனிதாபிமானமின்றி, அங்கிருந்து தனது காரை எடுத்து தப்பிச் சென்றிருக்கிறார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதேநேரம் ஒரு சிலர் விபத்தை ஏற்படுத்திய காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது அது நடிகை நந்தினி காஷ்யபின் கார் என்பது தெரியவந்தது. தனது சொகுசு வாகனத்தை கஹிலிபாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மறைக்க முற்பட்ட நிலையில், நடிகையின் வாகனத்தை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது அவர்களுடன் நடிகை நந்தினி கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறார். போனில் வீடியோ எடுத்தவரையும் நந்தினி தாக்க முயற்சிக்க, அந்த இடமே பரபரப்பானது.
அதைத்தொடர்ந்து நிலைமையை சமாளிக்க, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகை கூறியிருந்தார்.
ஆனால் மறுநாள் அவற்றை தர மறுத்ததாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
அதுமட்டுமின்றி, தன்னுடைய அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று கூற விசாரிக்காமல், அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் நடிகை நந்தினி இருந்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்துவந்தனர்.
இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இரண்டு கால்களும் முறிந்த நிலையில், இடுப்பு மற்றும் கை எலும்புகள் உடைந்தன.
மேலும் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மேல் சிகிச்சைக்காக இளைஞரை பாட்னாவிற்கு அனுப்பியிருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ, நடிகை நந்தினி கடும் எதிர்ப்பினை சந்தித்துவந்தார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சாமுயுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவதன்று அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த சாட்சியங்கள் அடிப்படையில், நடிகை நந்தினி மீது குவஹாத்தி போலீசார் வழக்குபதிவு செய்து கைதுசெய்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அதிகாலையில் அதிவேகமாக சொகுசு காரை ஓட்டிச் சென்று, சாலையில் இளைஞரை மோதியது மட்டுமின்றி, விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய நிலையில், தற்போது போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் நடிகை நந்தினி காஷ்யப் சிக்கிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu