RECENT NEWS

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

Aug 02, 2025

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

Aug 02, 2025

BIG STORIES

"ரிதன்யா 3 ஆண்டுக்கு முன்பே" பகீர் கிளப்பிய வழக்கறிஞர் "இப்படி நான் பார்த்ததே இல்லை" - நீதிபதி சொன்னது என்ன?

Aug 01, 2025 04:42 PM

185

"ரிதன்யா 3 ஆண்டுக்கு முன்பே" பகீர் கிளப்பிய  வழக்கறிஞர் "இப்படி நான் பார்த்ததே  இல்லை" - நீதிபதி சொன்னது என்ன?

"ரிதன்யா 3 ஆண்டுக்கு முன்பே" பகீர் கிளப்பிய வழக்கறிஞர் "இப்படி நான் பார்த்ததே இல்லை" - நீதிபதி சொன்னது என்ன?

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான மூன்றரை மாதத்தில் புதுமணப் பெண் ரிதன்யா காரில் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் ஆடியோவையும் அனுப்பியிருந்தார்.

இதனைதொடர்ந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், மூவரின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனால் மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், இந்த மனுவானது நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், திருமணம் இரு வீட்டார் சம்மத்துடன் தான் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் எந்த வரதட்சனை கொடுமையும் மனுதரார்கள் செய்யவில்லை என்றும் வரதட்சணை எதுவுமே கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் எந்த வகையிலும் ரிதன்யாவிற்கு தொல்லை கொடுக்கவில்லை, மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணைகளில் மனுதராருக்கு எதிராக எந்த முகாந்திரம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த ரிதன்யா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார் என குறிப்பிட்டு, மனுதாரர்களான ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி மூவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

மூவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் , ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜரானார். ரிதான்யா நன்கு படித்தவர், அவருக்கு சமுதாயத்தை பற்றிய புரிதல் உள்ளது. ரிதன்யாவின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரிதன்யாவிற்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொல்லை அளித்து வந்ததாகவும், அதன் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார் எனவும், அதனை மரண வாக்குமூலத்திலும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சிகள் கலைக்கப்படும்,விசாரணைகள் முழுவதும் பாதிக்கப்படும் ஆகவே அவர்கள் மூவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது, வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரிதான்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ரிதன்யாவின் வழக்கு முதலில் சந்தேகத்திற்குரிய மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றப்பட்டு மனுதரார்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தியதில் வரதட்சணை கொடுமை இல்லை என அறிக்கை அளித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் போன்ற மின்னணு ஆவணங்கள் மற்றும் தடயங்களை அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அது கிடைக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

ரிதன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கி பார்த்த நீதிபதி எம்.நிர்மல் குமார் , பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் ரீதியாக துன்புறுத்தல் எதுவும் இல்லை என வந்துள்ளது என தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கை திருப்தி அளிக்கும் விதமாக இல்லை , வெறும் அரை பக்கத்தில் அறிக்கை அளிக்கப்பட்டு இருப்பதை இதற்கு முன்பு, தான் இப்படி பார்த்ததேயில்லை எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

தடய அறிவியல் சோதனை முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் ரிதன்யா மற்றும் கவின்குமாரின் குணாதிசயம் குறித்து அவரின் நண்பர்கள், உறவினர்கள் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரிதன்யா வழக்கில் சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ரிதன்யாவுக்கு நடந்ததைப் போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாமி ஊர்வலத்தில் பைக் சாகசம்.. லவ்வர் பாயை வெளுத்த சம்பவம்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு..! 5 கிராமத்தினர் சாலை மறியல்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies