BIG STORIES
சிறுத்தை பல் வைத்திருந்தவர் வனத்துறை அலுவலகத்தில் சடலமாக தொங்கியது ஏன் ?.. கொலை செய்யப்பட்டதாக கூறி போராட்டம்
Aug 01, 2025 04:46 PM
49
சிறுத்தை பல் வைத்திருந்தவர் வனத்துறை அலுவலகத்தில் சடலமாக தொங்கியது ஏன் ?.. கொலை செய்யப்பட்டதாக கூறி போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள சின்னார் சோதனைச் சாவடியில் கேரள மாநில வனத்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
சோதனையின் போது சிறுத்தை பல் வைத்திருந்த மாரிமுத்து என்பவரை மடக்கிப்பிடித்தனர். மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவை கேரளா வனத்துறையினர் தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து அவரை விசாரிப்பதற்காக உடுமலை வனச்சராக அலுவலகத்திற்கு அழைத்து வந்த வனத்துறையினர் அவரை விசாரித்தனர்.
இந்தநிலையில் அதிகாலை வனச்சரக அலுவலகத்தில் உள்ள ஓய்வு அறையில் இருக்கும் கழிவறைக்கு மாரிமுத்து சென்ற நிலையில் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை என்றும் துக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியர் உடுமலை வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். மாரிமுத்துவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
ஒரு கட்டத்தில் வனத்துறை அலுவலகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர் இதனால் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வது சிக்கலானது.
காலை 4 மணிக்கு தூக்கிட்டு இறந்த நிலையில் மதியம் ஒரு மணி ஆகியும் அந்த அறையை திறக்கப்படவில்லை. சடலத்தையும் கீழே இறக்கவில்லை. மாரிமுத்துவின் மனைவி உடுமலை வன அலுவலகத்திற்கு வந்த பின்னரே அந்த அறையை திறந்து அவரது உடலை மீட்டனர்.
நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்பு மாரிமுத்துவின் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றினர். அப்போது சிலர் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி ஆம்புலன்ஸை மறித்து போராட்டம் செய்தனர்
அவர்களை சமாதானம் செய்து மாரிமுத்துவுன் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது அப்பா மாரிமுத்துவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தெளிவாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாரிமுத்துவின் மகள் சிந்து கோரிக்கை விடுத்தார்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாரிமுத்துவின் உடலில் எந்த வித காயங்களும் இல்லை என்றும் அவர் அணிந்திருந்த லுங்கியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியதால் அது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu