BIG STORIES
சாலையில் உருண்டு அழுத இளைஞர்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு.. சாலையை முடக்கிய கிராம மக்கள்..! நாட்டாமை தப்பி ஓட்டம் என வேதனை
Aug 02, 2025 01:35 AM
129
சாலையில் உருண்டு அழுத இளைஞர்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு.. சாலையை முடக்கிய கிராம மக்கள்..!
காதல் திருமணம் செய்த இளைஞரை தாக்கியதாக, 20 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்யலூர் சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்ட சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சாலையில் படுத்து கொண்டு கிராமத்துகாரர்கள் தன்னை தாக்கி விட்டதாக கூறி அழுகிராரே இவர் தான் மாற்று சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தீனா..!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அடுத்த கல்பட்டியை சேர்ந்தவர் தீனா, இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த கிராமத்து பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் காதல் திருமணம் செய்த பெண்ணுடன் கடந்த மாதம் ஊர் திருவிழாவுக்கு வந்த தீனா, கிராமத்து மக்கள் சாமி ஊர்வலத்தின் போது பைக்குடன் சுற்றி சுற்றி வந்து கெத்து காட்டியதாகவும், அதன் தொடர்ச்சியாக சில இளைஞர்கள் தீனாவை பிடித்து வெளியில் காயம் தெரியாத வகையில் வெளுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் சாலையில் படுத்துக் கொண்டு அழுது உருளும் தீனாவின் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவரது நண்பர்கள் , சாதி வெறியர்களால் தங்கள் சமுதாய இளைஞர் தாக்கப்பட்டதாக கூறி அந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக தீனா கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் கல்பட்டியை சேர்ந்த கிராமத்து பெரியவர்கள் 20 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் தீனா உள்ளிட்ட 20 பேர் மீது சாமி ஊர்வலத்தில் பிரச்சனை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் சாதிய வன்கொடுமை வழக்கில் 2 பேரை வெள்ளிக்கிழமை மாலை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பட்டி கிராமத்து மக்கள் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தும் படுத்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதனை சுற்றியுள்ள 5 க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் சாலை மறியலில் பங்கேற்றனர் அதில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறுகையில் தனது கணவர் திருவிழாவுக்கு சென்ற பாவத்துக்காக தனது கணவர் மீதும் சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் மாடு, கன்னுகளை எல்லாம் போட்டு விட்டு தலைமறைவாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
20 பேர் மீது பிசி ஆர் வழக்கு பதிவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர் மாற்றலாகி சென்றுவிட்ட நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பெண் டி.எஸ்.பியிடம் நீதி கேட்டு கிராமத்து மக்கள் வாக்குவாதம் செய்தனர்
மாலை 5 மணி அளவில் சாதாரணமாக தொடங்கிய சாலை மறியல் இரவு 8;45 மணி வரை நீடித்தது, சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம். இரு தரப்பு புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு தலை பட்சமாக நடவடிவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்ததால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் அங்கு பல கிலோமீட்டர் தூரம் தேங்கி நின்ற வாகனங்கள் மெல்ல ஊர்ந்தவாறு கடந்து சென்றன. இந்த மறியல் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu