BIG STORIES
பிரேக் அப் காதலி வீட்டில் பணம் கேட்டு பஞ்சாயத்து.. தட்டிக்கேட்ட இருவர் கொலை.. கொலையில் நிறுத்திய முகநூல் காதல்
Aug 02, 2025 01:39 AM
115
பிரேக் அப் காதலி வீட்டில் பணம் கேட்டு பஞ்சாயத்து.. தட்டிக்கேட்ட இருவர் கொலை..
திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் முக நூல் காதலை பிரேக் அப் செய்த பெண்ணின் வீடுதேடிச்சென்று காதலித்த போது செலவளித்த பணத்தை திருப்பிக்கேட்டு வம்பு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட இருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடி பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுனர் முகமது ஆதாம் ( 23) இவர் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்த போது முக நூல் மூலம் அறிமுகமான புலிவலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். இருவரும் வேளாங்கண்ணியில் ஆரம்பித்து அவ்வப்போது ஊர் ஊராக சுற்றி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். தற்போது அந்த மாணவிக்கு 22 வயது ஆகும் நிலையில் படிப்பை முடித்து பிசியோதெரப்பிஸ்ட் பணியில் சேர்ந்த நிலையில், கடந்த ஒரு மாததிற்கு முன்பாக முகமது ஆதமுடனான காதலை பிரேக் அப் செய்து விட்டு பேசாமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்க்கிடையே முகமது ஆதம், குடும்பத்துடன் தென்காசிக்கு சென்று விட்டார். இந்த நிலையில் காதலித்த போது தான் செலவழித்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை திரும்பக்கேட்டு ஆதம் அந்த பெண்ணுக்கு அங்கிருந்த படியே செல்போனில் குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதனால் அந்த பெண் அவரது செல்போன் நம்பரையும் பிளாக் செய்து விட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி நள்ளிரவு முகமது ஆதம், அவரது நண்பர்களான பாண்டுகுடி முகமது ரசூல்தீன், தென்காசி ஹாஜ் முகம்மது ஆகிய மூன்று பேரும் சேர்ந்து புலிவலத்தில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று தன்னிடம் பேசாதது குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் அண்ணன் கோபிகிருஷ்ணன் சத்தம் போட்டதால், தான் காதலித்த போது செலவழித்த பணத்தை திருப்பிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஆதம். அப்போது கோபிகிருஷ்ணனின் அழைப்பின் பேரில் அவரது நண்பர்களான தர்மா, சந்தோஷ்குமார், தட்சினாமூர்த்தி ஆகியோர் அங்கு வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது ஆதம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிமன்ற ஊழியரான சந்தோஷ்குமாரை குத்தி விட்டு தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிப்பதற்காக விரட்டிச்சென்ற தட்சிணாமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்ததால் இருவரும் சுருண்டு விழுந்தனர். சம்பவ இடத்திலே சந்தோஷகுமார் உயிரிழந்த நிலையில் , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தட்சிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீதிமன்ற ஊழியர் சந்தோஷ்குமார், தச்சுத்தொழிலாளியான தட்சிணாமூர்த்தி இருவரும் தர்மாவின் நண்பர்கள் என்றும் தர்மாவின் நண்பர் கோபிகிருஷ்ணனின் தங்கைக்கு பிரச்சனை என்று வந்த இடத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இருவரும் பலியானதாக போலீசார் தெரிவித்தனர் . இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரசூல்தீன், ஹாஜ் முகம்மது, முகமது ஆதம் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
80 களிலும், 90 களின் இறுதியிலும் காதலித்த பெண் காதலை பிரேக் அப் செய்தால் தாடி வளர்த்துக் கொண்டு சோகப்பாடல்களை இசைத்துக் கொண்டு சுற்றிய இளைய சமுதாயம், தற்போது காதலித்து கை விடும் பெண்களை வீடுதேடிச்சென்று ஆயுதத்துடன் தாக்கும் நிலைக்கு வந்திருப்பது விபரீதத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu