RECENT NEWS

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

Aug 02, 2025

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

கியர் ராடு பழுதானதால் நடுசாலையில் நின்ற அரசுப் பேருந்து

Aug 02, 2025

BIG STORIES

சாமி ஊர்வலத்தில் பைக் சாகசம்.. லவ்வர் பாயை வெளுத்த சம்பவம்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு..! 5 கிராமத்தினர் சாலை மறியல்

Aug 02, 2025 01:51 AM

92

சாமி ஊர்வலத்தில் பைக் சாகசம்.. லவ்வர் பாயை வெளுத்த சம்பவம்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு..! 5 கிராமத்தினர் சாலை மறியல்

சாமி ஊர்வலத்தில் பைக் சாகசம்.. லவ்வர் பாயை வெளுத்த சம்பவம்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு..!

மாற்று சமுதாய பெண்ணை காதலித்ததால் நெல்லையில் ஐடி ஊழியர் வெட்டிக் கொலை செய்யபட்டதால் நடந்த போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கின்றது..! அதே நாள், திருச்சி அருகே மாற்று சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரால் 20 பேர் மீது பதியப்பட்ட பிசிஆர் வழக்கிற்கு எதிராக 5 கிராமத்து மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கின்றனர்

அந்த இளைஞர் பெண்ணை கூட்டிசென்றதற்கு எதிராக தாக்கப்படவில்லையாம்.. சாமி ஊர்வலத்தில் பைக்கில் வந்து வம்பு செய்ததாக யாரோ சிலர் அந்த இளைஞரை தாக்க.. அந்த திருவிழாவை நடத்தியவர்கள், திருவிழாவுக்கு விருந்தினராக வந்திருந்த ஊர் நாட்டாமைகள் என 20 பேர் மீது பாய்ந்த சாதிய வன்கொடுமை வழக்கு தான் அத்தனைக்கும் காரணம் என்று சொல்லப்படுகின்றது... நடந்தது என்ன விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு... 

சாலையில் படுத்து கொண்டு கிராமத்துகாரர்கள் தன்னை தாக்கி விட்டதாக கூறி அழுகிராரே இவர் தான் மாற்று சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தீனா..! 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அடுத்த கல்பட்டியை சேர்ந்தவர் தீனா, இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த கிராமத்து பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் காதல் திருமணம் செய்த பெண்ணுடன் கடந்த மாதம் ஊர் திருவிழாவுக்கு வந்த தீனா, கிராமத்து மக்கள் சாமி ஊர்வலத்தின் போது பைக்குடன் சுற்றி சுற்றி வந்து கெத்து காட்டியதாகவும், அதன் தொடர்ச்சியாக சில இளைஞர்கள் தீனாவை பிடித்து வெளியில் காயம் தெரியாத வகையில் வெளுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனால் சாலையில் படுத்துக் கொண்டு அழுது உருளும் தீனாவின் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவரது நண்பர்கள் , சாதி வெறியர்களால் தங்கள் சமுதாய இளைஞர் தாக்கப்பட்டதாக கூறி அந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தீனா கொடுத்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் கல்பட்டியை சேர்ந்த கிராமத்து பெரியவர்கள் 20 பேர் மீது சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் தீனா உள்ளிட்ட 20 பேர் மீது சாமி ஊர்வலத்தில் பிரச்சனை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சாதிய வன்கொடுமை வழக்கில் 2 பேரை வெள்ளிக்கிழமை மாலை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பட்டி கிராமத்து மக்கள் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தும் படுத்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதனை சுற்றியுள்ள 5 க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் சாலை மறியலில் பங்கேற்றனர் அதில் பங்கேற்ற பெண் ஒருவர் கூறுகையில் தனது கணவர் பக்கத்து ஊர் நாட்டாமையாக இருப்பதாகவும், திருவிழாவுக்கு சென்ற பாவத்துக்காக தனது கணவர் மீதும் சாதிய வன்கொடுமை வழக்கு பதிவு செய்து இருப்பதால் அவர் மாடு, கன்னுகளை எல்லாம் போட்டு விட்டு தலைமறைவாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.

20 பேர் மீது பிசி ஆர் வழக்கு பதிவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர் மாற்றலாகி சென்றுவிட்ட நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பெண் டி.எஸ்.பியிடம் நீதி கேட்டு கிராமத்து மக்கள் வாக்குவாதம் செய்தனர்

மாலை 5 மணி அளவில் சாதாரணமாக தொடங்கிய சாலை மறியல் இரவு 8;45 மணி வரை நீடித்தது, சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம். இரு தரப்பு புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு தலை பட்சமாக நடவடிவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்ததால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர் அங்கு பல கிலோமீட்டர் தூரம் தேங்கி நின்ற வாகனங்கள் மெல்ல ஊர்ந்தவாறு கடந்து சென்றன. இந்த மறியல் போராட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

சட்டத்தை பயன்படுத்தி செய்தாலும், சட்டத்தை சாதகமாக்கி செய்தாலும் குற்றம் கேடு தரும்.!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சாமி ஊர்வலத்தில் பைக் சாகசம்.. லவ்வர் பாயை வெளுத்த சம்பவம்.. 20 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு..! 5 கிராமத்தினர் சாலை மறியல்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies