RECENT NEWS

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

Aug 03, 2025

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

Aug 03, 2025

BIG STORIES

அஜீத் பட பஞ்ச் கூலி பட விழாவில் ரஜினி உற்சாக பேச்சு..! அரங்கம் அதிர யார் காரணம் ?

Aug 03, 2025 02:02 AM

90

அஜீத் பட பஞ்ச் கூலி பட விழாவில் ரஜினி உற்சாக பேச்சு..! அரங்கம் அதிர யார் காரணம் ?

அஜீத் பட பஞ்ச் கூலி பட விழாவில் ரஜினி உற்சாக பேச்சு..! அரங்கம் அதிர யார் காரணம் ?

கமல் ஹாசன் சிபாரிசு, அஜீத் பட பஞ்ச் டயலாக் என்று கூலிப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் சுவாரஸ்ய பேச்சுக்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பியதால் அரங்கம் அதிர்ந்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள கூலி படத்தில் நடித்துள்ள அமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபீன் ஷாகிர்ஆகியோர் அந்த படத்தில் நடித்திருந்த கெட்டப்பிலேயே விழாவுக்கு வந்திருந்தனர்.

விழாவில் தனது பேச்சை தொடங்கிய ரஜினிகாந்த் , நான் 1950 மாடல், லட்சம் கிலோ மீட்டர் ஓடி இருக்கிறேன்.. பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள் எனவே என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன் என்றார்.

அனிருத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் பத்தாது, அனிருத் இந்தியாவின் முதல் ராக் ஸ்டார். இந்த படம் பான் இந்தியா படமாக இருக்க வேண்டும் என லோகேஷிடம் கூறினேன். கைதி படம் பார்த்துவிட்டு உடனே லோகேஷுக்கு போன் செய்து வாழ்த்தினேன்.உடனே வீட்டுக்கு அழைத்து அவரிடம் கதை கேட்டேன், கதை கேட்டபோது, நான் கமல் சார் ரசிகன் என லோகேஷ் கனகராஜ் கூறினார்.

திடீரென கமல்ஹாசன் எனக்கு போன் செய்து, விகரம் படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜை அனுப்பி வைப்பதாக கூறினார். மீண்டும் அவரை மிஸ் செய்துவிடக்கூடாது என நினைத்து உடனே அழைத்துவரச் சொன்னேன். முக்கிய கதாபாத்திரத்துக்கு சத்யராஜை நடிக்க கேட்டோம் அவர் ஒப்புக் கொண்டார்.

சிவாஜி படத்தில் சத்யராஜை நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம், எனக்கு கொடுக்கும் சம்பளத்தை அவருக்கு தருவதாக கூட கேட்டு பார்த்தோம். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு அவர் ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என லோகேஷிடம் கூறினேன். சத்யராஜுக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கலாம், அவர் மனசில் பட்டதை சொல்லிட்டு போயிடுவார், மனசுல பட்டதை பேசறவங்களை நம்பலாம், மனசுல வச்சுகிட்டு வெளியில் எதுவும் காட்டாதவங்கள நம்ப முடியாது என்றார் ரஜினிகாந்த்

படத்தில் மெயின் வில்லனாக நாகார்ஜுனாவை தேர்வு செய்தபோது, அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என நினைத்தேன், நாகார்ஜுனாவை பணம் கொடுத்து வாங்க முடியாது என மங்காத்தாவில் அஜித் ஒரு டயலாக் சொல்லுவார், எத்தனை நாள் தான் நானும் நல்லவனாக நடிப்பது. அதுபோல இந்த படத்தில் நாகார்ஜூனா நடித்திருப்பதாக தெரிவித்தார்.

அமீர் கான் ஒரு கதையை ஓகே சொல்ல 2 வருடங்கள் ஆகும். தமிழில் கமல்ஹாசன் என்றால் வடக்கில் அமீர்கான், அவரது கதாபாத்திரங்களை கேட்டதும், தனக்கு கதையே மறந்துவிட்டது என்று கூறிய ரஜினி படத்தின் முதல் ஷாட்டே பிணத்துக்கு மாலை போடும் காட்சியை எடுத்தார். யாராவது, எந்த இயக்குநராவது இப்படி ஒரு காட்சியை முதல் காட்சியாக எடுப்பாரா என்று லோகேஷ் கனகராஜ் கனகராஜை கலாய்த்தார்

படப்பிடிப்புக்காக விசாகப்பட்டணம் சென்றபோது, தன்னை தாமதமாக வரச் சொன்னதாகவும், அப்போது சவுபின் நடித்த காட்சியை பார்த்தபோது தான் ஆடிப்போய்விட்டதாக தெரிவித்தார் ரஜினிகாந்த்

கமலே பார்த்து வியக்கும் அளவுக்கு நாகார்ஜுனா நடித்துள்ளார்.படப்பிடிப்பில் நாகார்ஜுனாவை பார்த்து வியந்துவிட்டேன் இளமையின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டேன்.மாலை 6.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு விடுவதாக கூறினார், எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.உடலை நாம் கண்டுக்கவில்லை என்றால் உடல் நம்மை தண்டித்துவிடும். உடலுக்கு எது ஒத்துக் கொள்ளாது என தெரிந்து கொண்டாலே போதும் என்று ரசிகர்களுக்கு உடல் நலம் குறித்த அப்டேட் கொடுப்பதற்கும் ரஜினிகாந்த் தவறவில்லை

இந்த மரம் சாயும்போதெல்லாம் ரசிகர்கள் நீங்கள் என்னை தூக்கி பிடித்துள்ளீர்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்க வேண்டும். என் உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு அது தான் இறைவனின் குரல். உனக்குள் உன்னுடைய குரலே கேட்கும், இறைவன் குரலையும், உன் குரலையும் பிரித்து பார்க்க கற்க வேண்டும் என்ற ரஜினிகாந்த், எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும், வீட்டில் நிம்மதி, வெளியே கவுரவம் இல்லாவிடில் எதுவுமே இல்லை

என்று அவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும் ரசிகர்களின் உற்சாக கூச்சலால் அரங்கம் அதிர்ந்தது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மனைவியை கொலை செய்து தொலைக்காட்சி நிலையம் சென்ற சி.ஆர்.பி.எப் போலீஸ்காரர் கைது..! 2 தடவை நேரில் பார்த்ததாக வேதனை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies