BIG STORIES
மனைவியை கொலை செய்து தொலைக்காட்சி நிலையம் சென்ற சி.ஆர்.பி.எப் போலீஸ்காரர் கைது..! 2 தடவை நேரில் பார்த்ததாக வேதனை
Aug 03, 2025 03:06 AM
291
மனைவியை கொலை செய்து தொலைக்காட்சி நிலையம் சென்ற சி.ஆர்.பி.எப் போலீஸ்காரர் கைது..! 2 தடவை நேரில் பார்த்ததாக வேதனை
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மனைவியை கொலை செய்து விட்டு தனியார் தொலைக்காட்சி நிலையத்திற்குச் சென்று பேட்டி கொடுப்பதற்கு முயன்ற சி.ஆர்.பி.எப் போலீஸ்காரரை சென்னை தேனாம்பேட்டை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிலையத்துக்கு சென்ற வாட்டசாட்டமான நபர் ஒருவர், தனது மனைவி குறித்து பேட்டி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அவரிடம் விவரம் கேட்டபோது சார், என்னோட பெயர் தமிழ் செல்வன், சி.ஆர்.பி.எப் போலீசா வேலை பார்க்கிரேன், அவ ரொம்ப மோசம் சார், அவளுக்காக நான் குடும்பத்தை விட்டு ஊரை காவல் காத்துக்கிட்டு கெடக்கேன் .. அவ என்னன்னா, இப்படி மோசமா நடந்து கிடுதா...?!
நானே 2 தடவை அந்த கன்றாவியை நேர்ல பார்த்துட்டேன்.. வீட்டை சுற்றி சிசிடிவி காமிரா பொருத்திய பின்னரும் அடங்க மாட்டுறா... அதான் அவள வெட்டி கொலை பண்ணிட்டேன்... என்று சொல்ல அதனை கேட்ட ஊழியர் திகைத்து போய் லோக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.
விரைந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் , தமிழ் செல்வனை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அவர் தனது மனைவியை கொலை செய்தது தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் என்பதால் உடனடியாக ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தமிழ் செல்வனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தூத்துக்குடிக்கு அழைத்துச்சென்றனர்.
தமிழ் செல்வன் - உமா மகேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 11 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். மத்திய காவல் படையில் பூந்தமல்லி யூனிட்டில் பணியாற்றி வரும் தமிழ்ச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது மனைவி வெளியாள் ஒருவருடன் வீட்டிற்குள் பேசிக் கொண்டிருப்பதை கண்டு சந்தேகித்து சண்டையிட்டுள்ளார்.
இதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஊரில் இருந்து வந்தாலே சண்டை நடப்பது வழக்கமான ஒன்று என்பதாலும், இரவு நேரமானதாலும் உமா மகேஸ்வரி தனது குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டார். ஆனால் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் நள்ளிரவு ஆனதும் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி உமா மகேஸ்வரியை தலை கழுத்து என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் உமா மகேஸ்வரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை அறியாமல் அவரது இரண்டு குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், நள்ளிரவு ஒரு மணி அளவில் குழந்தைகளை எழுப்பிய தமிழ்ச்செல்வன் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று மாமனார் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.
காரணம் கேட்டபோது மனைவி மாயமானதாக கூறி சமாளித்துவிட்டு தமிழ்ச்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் உமா மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான தமிழ்செல்வனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனது மனைவியின் நடத்தை குறித்து “சொல்வதெல்லாம் உண்மை” என்று சொல்ல நினைத்து தொலைக்காட்சி நிலையத்துக்கு சென்ற நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu