RECENT NEWS

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

Aug 03, 2025

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

"வீடு, வீடாக சென்று மக்களின் குறைகளை கேளுங்கள்" - இபிஎஸ்

Aug 03, 2025

முகப்பு

ஆடிப்பெருக்கு - புதுமணத் தம்பதிகள் புனித நீராடி வழிபாடு..!

Aug 03, 2025 08:59 AM

20

ஆடிப்பெருக்கு - புதுமணத் தம்பதிகள் புனித நீராடி வழிபாடு..!

ஆடிப்பெருக்கு - புதுமணத் தம்பதிகள் புனித நீராடி வழிபாடு..!

ஆடி பெருக்கையொட்டி ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை காவிரியில் புதுமண தம்பதிகள் புனித நீராடி புது மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுவதையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் புனித நீராடி புதிய தாலிச்சரடு மாற்றிக் கொண்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பொது மக்கள்அக்னி தீர்த்த கடல் மற்றும் புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் திரண்ட பொதுமக்கள் ஆடிப்பெருக்கையொட்டி புனித நீராடி பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தஞ்சை திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் புதுமண தம்பதிகள் புனித நீராடினர் .காப்பரிசி, மாங்கல்யம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து பெரியோர்களிடம் ஆசி பெற்று தங்கள் திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிப்பட்டனர்.

ஆடிப்பெருக்கையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி 18, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரப்பபகுதிகளில் திரண்ட பக்தர்கள் புனித நீராடினர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் திரண்ட பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.பெண்கள்,புதுமண தம்பதிகள் தாலிக்கயிறு மாற்றி வழிபாடு செய்தனர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மனைவியை கொலை செய்து தொலைக்காட்சி நிலையம் சென்ற சி.ஆர்.பி.எப் போலீஸ்காரர் கைது..! 2 தடவை நேரில் பார்த்ததாக வேதனை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies