BIG STORIES
பார்க்கிங் பிரச்சனை கையில் அரிவாளுடன் சண்டையிட்ட காட்சிகள்...!
Aug 04, 2025 05:49 AM
185
பார்க்கிங் பிரச்சனை கையில் அரிவாளுடன் சண்டையிட்ட காட்சிகள்...!
சென்னை சாலிகிராமத்தில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவத்தின் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை போன்ற பெருநகரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கையும் போதிய இட வசதியின்மையும் பல பகுதிகளில் பார்க்கிங் பிரச்சனைக்கு மூல காரணமாக அமைகிறது.
அந்த வகையில் நெரிசலான பிதுங்கி வழியும் குடியிருப்புகளுக்கு இடையே வாகனங்களை நிறுத்துவது என்பது பெரும்பாடு. வாகன வசதியுடன் கூடிய குடியிருப்புகளிலும் நீதிமன்றம் வரை செல்லும் பிரச்சனையாக பார்க்கிங் பிரச்சனை நீடிக்கிறது
மூன்று தேசிய விருதுகளை வென்ற பார்க்கிங் திரைப்படத்தில், தங்களது கார்களை நிறுத்தும் பார்க்கிங் பிரச்சினைக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு கொலை செய்யும் அளவிற்கு செல்லும் காட்சிகளை போல் சென்னையில், அரிவாளுடன் வந்து மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சாலிகிராமம் வால்மீகி சாலையில் அமைந்துள்ள நான்கு தளங்கள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
முதல் தளத்தில் வசித்து வரும் முஜிப் என்பவருக்கும் அதே குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வரும். ஜெயச்சந்திரன் என்பவருக்கும் சமீப நாட்களாக வாகனங்களை பார்க்கிங் செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. முஜீப் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருவதாகவும், ஜெயச்சந்திரன் விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்பொழுது இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் ஜெயச்சந்திரனுக்கும் முஜிப்பிற்கும் பார்க்கிங் தொடர்பாக மீண்டும் பிரச்சனை முற்றிய நிலையில், ஜெயச்சந்திரன் திடீரென வீட்டில் இருந்து வீச்சருவாளுடன் வெளியில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரிவாளுடன் வந்த ஜெயச்சந்திரனை பார்த்து, முடிந்தால் என்னை வெட்டு என அவரிடம் முஜீப் எகிற, தன்னை வீடியோ எடுப்பதை பார்த்ததும் அரிவாளைக் கீழே போட்டு விட்டு முஜிப்பின் இருசக்கர வாகனத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்கும் கைகலப்பாக மாறியது. தடுக்க வந்த முஜிபின் தாயாருக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் கேகே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் அரிவாளுடன் வந்த ஜெயச்சந்திரனின் செயலை கண்டித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் முஜீப் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu