BIG STORIES
பெரிய கருவாட்டுக்கு ஆசைப்பட்ட பெருச்சாளிக்கு விழுந்த சரமாரி அடிகள்..! தாசில்தார் என்றும் பாராமல்..
Aug 04, 2025 05:58 AM
259
பெரிய கருவாட்டுக்கு ஆசைப்பட்ட பெருச்சாளிக்கு விழுந்த சரமாரி அடிகள்..! தாசில்தார் என்றும் பாராமல்..
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பெண் விஆர்ஓ வீட்டிற்கு சென்று ஆடைகளைக் களைந்த தாசில்தாரை, பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் சுற்றிவளைத்து அடித்து வெளுத்துவிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் கிராம வருவாய் அதிகாரியின் வீட்டின் படுக்கை அறையில் புகுந்து ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்று கொண்டு ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதால் பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் சுற்றி வளைத்து தாக்கிய காட்சிகள் தான் இவை.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை மண்டலம் வாக்காடு தாசில்தாராக (எம்.ஆர்.ஓ.) பணிபுரிந்தவர் ராமையா.
இதற்கு முன்பு பெல்லக்கூர் தாசில்தாராக பணிபுரிந்த போது அங்கு கிராம வருவாய் அதிகாரி பணிபுரியும் பெண் மீது அவருக்கு ஆசை கொண்டார். இதனால் பெண் வி.ஆர்.ஓ.வை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ராமையா வாக்காடுக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அந்த அந்த பெண் வி.ஆர்.ஓ.வின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் "நான் உன் வீட்டிற்கு வந்தால் சிக்கன் சமைப்பாயா? நான் கேட்டதைத் தருவாயா?" என்று எல்லாம் செல்போனில் மெசேஜ் அனுப்பியது மட்டுமல்லாமல், அன்று இரவு கெட்ட எண்ணத்துடன், அந்தப் பெண் விஆர்ஓ வீட்டிற்கு சென்றார் ராமையா.
நேராக வீட்டின் படுக்கையறைக்குச் சென்று தனது ஆடைகளை களைந்து நின்று கொண்டு பெண் வி.ஆர்.ஓ.வை தன்னிடம் வருமாறு அழைத்துள்ளார்.
தாசில்தார் வீட்டுக்கு வருவார் என்பதை அந்த பெண் விஆர்ஓ தனது தாயிடம் முன்கூட்டியே கூறி அவர்களையும் தயார் நிலையில் வைத்திருந்தார்.
இதனால் தாசில்தார் ராமையா அறைக்குள் வந்தவுடன் அவர் தனது தாயை உதவிக்கு அழைத்தார்.
அடுத்த நொடி ஆவேசமாய் அறைக்குள் நுழைந்த வி.ஆர்.ஓ.வின் தாய், ஆடையின்றி நின்ற தாசில்தார் ராமையாவை துடைப்பம் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களால் சரமாரியாக தாக்கினார்.
பெரிய கருவாடு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த பெருச்சாளி பொறியில் சிக்கியது போல, தாசில்தாருக்கு விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை அலற விட்டது.
அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆடைகளை அணிந்துகொண்டு தப்பி ஓட முயன்றார். ஆனாலும் பெண் வி.ஆர்.ஓ.வின் தாயார் மற்றும் அங்கு இருந்தவர்கள் அவரை வீட்டுக்குள்ளேயே விரட்டி விரட்டி தாக்கினர்
தாசில்தார் ராமையா தான் பெல்லக்கூரில் பணியாற்றிய போதே தனக்கும் அந்த பெண் விஆர்ஓவிற்கும் திருமணம் கடந்த உறவு இருந்ததாகவும்,
அதனால்தான் அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும், அவர் இப்படி திருப்பிக் கொள்வார் என்று நினைக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார் .
இந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்த திருப்பதி மாவட்ட ஆட்சியர், விசாரணை அதிகாரி ஒருவரை நியமித்து இந்த விவகாரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி முழு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu