RECENT NEWS

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

Aug 06, 2025

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் படகுடன் சிறைபிடிப்பு

Aug 06, 2025

BIG STORIES

மீண்டும் ஒரு கிரீஷ்மா! காதலனுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூஸ்... மாநிலத்தை உலுக்கிய திடுக் சம்பவம்..!

Aug 04, 2025 04:13 PM

125

மீண்டும் ஒரு கிரீஷ்மா! காதலனுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூஸ்... மாநிலத்தை உலுக்கிய திடுக் சம்பவம்..!

மீண்டும் ஒரு கிரீஷ்மா! காதலனுக்கு ஒரு ஸ்பெஷல் ஜூஸ்... மாநிலத்தை உலுக்கிய திடுக் சம்பவம்..!

கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து காதலனை கொலைசெய்த கிரீஷ்மா போன்று, கேரளாவை மீண்டும் அதிர வைத்திருக்கிறார் இளம் பெண் இருவர்... திட்டம் போட்டு காதலனை தீர்த்துக் கட்டியது ஏன்? என்ன நடந்தது? பார்க்கலாம்...

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான அதீனா. இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் காவல்நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்கிக் கிடப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை நடத்தியதில் அது மாதிரப்பிள்ளி பகுதியைச் சேர்ந்த 38 வயதான அன்ஸில் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அன்ஸிலின் குடும்பத்திற்கு கால் செய்து தகவல் கொடுத்திருக்கின்றனர். பின்னர் அன்ஸிலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அன்ஸில் ஜே.சி.பி, டிப்பர் லாரி போன்ற கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்தவர். இவருக்கு ஸப்னா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாதிரப்பிள்ளி பகுதியை சேர்ந்தவர் எப்படி பிண்டிமன பகுதிக்கு வந்தார்? ஏன் விஷம் அருந்தினார்? என பல்வேறு கேள்விகள் போலீசாருக்கு எழுந்தது.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அன்ஸில் தனக்கு விஷம் கொடுத்தது, அதீனா தான் என கூறியிருந்தார். இதையடுத்து மருத்துவர்களிடமும் அன்ஸில் தெரிவித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்ஸில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்பின்னர் கொலைவழக்காக பதிவிசெய்த போலீசார், சம்பவ இடத்தில் நடத்திய் ஆய்வில், சம்பவதன்று அதீனா வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா ஆஃப்ஃபில் இருந்ததும், அவரது சமையலறை ஜன்னல் வழியே பூச்சிகொல்லி மருத்து பாட்டில் இருந்ததும் போலீசாருக்கு அதீனா மீது சந்தேகத்தை மேலும் எழுப்பியது.

அதைத்தொடர்ந்து அதீனாவை அழைத்து தீவிர விசாரனையில் ஈடுப்பட்டனர். அப்போது வெளிவந்த தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. இறந்த அன்ஸிலுக்கும், அதீனாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அதீனா தனியாக வீடு எடுத்து தங்கி இருப்பதால், அவரை பார்க்க அடிக்கடி அன்ஸில் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் அன்ஸில் போன்று, அதீனாவும் வேறு சில ஆண்களுடன் நெருங்கி பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அன்ஸில், அதீனா மற்ற ஆண்களிடம் பேச கூடாது, பழக கூடாது என கண்டித்திருக்கிறார். இதனால் இவர்களுக்கிடையே நாளுக்கு நாள் சண்டை அதிகரித்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் தன்னை தவிர யாரிடமும் பழக கூடாது என அன்ஸில் துப்பாக்கி காட்டி அதீனாவை மிரட்டியாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் பயந்துபோன அதீனா, அன்ஸில் தன்னை தாக்கியதாகவும், தன்னிடம் பணம் பறித்துகொண்டதாகவும் புகார் ஒன்றை காவல்நிலைத்தில் அளித்திருக்கிறார்.

அந்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருவரையும் வைத்து சமரசமாக முடித்துவைக்கப்பட்டது. இருப்பினும் அதன்பிறகும் அதீனாவை விடாமல் அன்ஸில் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அன்ஸிலை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அதீனா, சம்பவத்தன்று கடைக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிவந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அன்று இரவு அன்ஸிலை தனது வீட்டுக்கு வர சொல்லி அழைத்துள்ளார் அதீனா. மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்திருக்கிறார்.

திட்டமிட்டபடி ஜூஸில் அந்த பூச்சிக் கொல்லி மருந்தை கலக்கி அன்ஸிலுக்கு பாசமாக கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்ததும் துடிதுடித்த உடனே அன்ஸில் மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு அருகே போட்டு விட்டு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுப்பது போல் அதீனா நாடகம் ஆடியிருக்கிறார்.

சமரசமாக முடித்துவைக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கூறியபடி, தனக்கு தரவேண்டிய பணத்தை அன்ஸில் தராமல் மீண்டும் மீண்டும் தன்னை தொந்தரவு செய்துவந்ததால் தான் கொலைசெய்ததாக அதீனா வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கஷாயத்தில் விஷம் கலந்துகொடுத்து காதலனை கொலைசெய்த கிரீஷ்மா போன்று, ஆண் நண்பருக்கு ஜூஸில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து அதீனா கொலைசெய்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies