BIG STORIES
“டேய் அவ உன் பொண்டாட்டிடா.. பார் டான்சர்ன்னு நெனச்சியா..”? புதுப்பெண் சோக முடிவு பின்னணி..
Aug 05, 2025 05:33 AM
354
“டேய் அவ உன் பொண்டாட்டிடா.. பார் டான்சர்ன்னு நெனச்சியா..”? புதுப்பெண் சோக முடிவு பின்னணி..
பொறியியல் பட்டதாரி இளைஞருடன் திருமணமாகி 2 மாதங்களாக மனைவியை வீட்டிற்குள் பூட்டி வைத்தும், ஆடையில்லாமல் நடனம் ஆடச்சொல்லி டார்ச்சர் செய்ததாலும் எம்.பி.ஏ பட்டதாரி பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடியை சேர்ந்த கலியபெருமாள் மகள் ஹேமா(28).எம்பிஏ பட்டதாரியான இவருக்கும் பெங்களுருவில் பணிபுரியும் தஞ்சை மாவட்டம் தாராசுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான செல்வமுத்துகுமரனுக்கும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.இந்நிலையில் திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த 10 சவரன் நகை போதாது, கூடுதலாக நகை வேண்டுமென கொடுமை செய்ததுடன், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட செல்வமுத்துகுமரன் ஹேமாவை வீட்டில் பூட்டி வைத்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஹேமா செல்போன் மூலம் பெற்றோரிடம் கூறியதை அறிந்த செல்வமுத்துகுமரன் செல்போனை தூக்கி எறிந்து உடைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் ஆடி மாதம் அழைப்புக்காக கடந்த ஜூலை 9ம் தேதி ஹேமாவை பெற்றோர் காரைக்கால் அழைத்து வந்துள்ளனர்.அதன் பிறகு ஹேமா கணவருடன் செல்ல மறுத்து,கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
பணி முடிந்து வீட்டு வந்ததும் செல்போனில் கண்டதையும் பார்த்துவிட்டு அதில் வருவது போல ஆடையின்றி ஆபாசமாக நடனமாட கூறி செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், ஆபாச வீடியோக்களை காண்பித்து துன்புறுத்தியதாகவும், தினமும் அவனது கொடுமையால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தவித்ததாகவும் தனது பெற்றோரிடம் கூறிய ஹேமாஅந்த அரக்கனிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என கூறியுள்ளார்
இதனை தொடர்ந்து ஹேமாவின் பெற்றோர் செல்வமுத்துக்குமரனின் பெற்றோரிடம் இனி தனது மகளை அனுப்ப முடியாது, விவாகரத்து பெற இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தூங்க சென்ற ஹேமா திங்கட்கிழமை காலையில் வெகு நேரமாக கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்த போது அறையின் மின்விசிறியில் சேலையினால் தூக்கிட்ட நிலையில் ஹேமா சடலமாக கிடந்தார். இது குறித்து ஹேமாவின் பெற்றோர் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருமணமானது முதல் தனது மகளை செல்வமுத்துக்குமரன் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன், தினமும் ஆடையின்றி ஆபாசமாக நடனமாட கூறி செக்ஸ் டார்ச்சர் செய்து உள்ளதாகவும் ஹேமாவின் பெற்றோர் புகாரில் தெரிவித்துள்ளனர். ஹேமாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் செல்வ முத்துக்குமரன் செல்போன் மூலம் ஹேமாவை மிரட்டியதாகவும் அதனால் பயந்து போய் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாகவும் குற்றஞ்சாட்டிய உறவினர்கள் செல்வமுத்துக்குமரனை கைது செய்யும் வரை ஹேமாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹேமாவின் உடல் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செல்வமுத்துக்குமரனை வருவாய் வட்டாட்சியர் விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் குடும்பத்துடன் தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூரில் ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்ட சோகம் நீங்காத நிலையில் கணவரின் வெறித்தனமான ஆபாச சேட்டைகளால் ஹேமா பலியானதாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu