BIG STORIES
மனைவி மீது தீரா சந்தேகம்... 3 மகளை கொன்ற தந்தை... விசாரணையில் பகீர் தகவல்..!
Aug 06, 2025 01:01 AM
71
மனைவி மீது தீரா சந்தேகம்... 3 மகளை கொன்ற தந்தை... விசாரணையில் பகீர் தகவல்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேம்பாகவுண்டன்புதூரில் மனைவி மீது தீரா சந்தேகம் கொண்டு தனது 3 மகள்களைக் கொலை செய்து விட்டு தந்தை விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேம்பாகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் தனியார் ரிக் வண்டி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜ், 16 வயதான பாரதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். கோவிந்தராஜ் - பாரதி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு குடும்பத்தினர் அனைவரும் மேகி சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றுள்ளனர். மனைவி பாரதி 1 வயது மகனுடன் படுக்கையறையில் தூங்கிய நிலையில், கோவிந்தராஜும் அவர்களது மகள்களான பிரக்திஷாஸ்ரீ, ரித்திகா ஸ்ரீ, தேவா ஸ்ரீ ஆகிய 4 பேரும் வீட்டின் ஹாலில் படுத்து தூங்கியுள்ளனர்.
அதிகாலை 2 மணி அளவில் கோவிந்தராஜ், பாரதி உறங்கிக்கொண்டிருந்த அறையை பூட்டால் பூட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளையும் கோவிந்தராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் அலறியதால், அலறல் சத்தம் கேட்டு விழித்த பாரதி பதறியடித்துக்கொண்டு , கதவை திறக்க முயன்றார். வெளிப்பகம் பூட்டுபோடப்பட்டிருந்ததால் பாரதியால் கதவை திறக்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடிய பாரதி அங்கிருந்த குத்துவிளக்கை வைத்து கதவில் குத்தி துணையிட்டுள்ளார். அதில் விழுந்த துவாரத்தின் வழியே கையை விட்டு மாற்று சாவி மூலம் வெளிப்பக்க பூட்டை திறந்து வெளியே வந்துள்ளார்.
ஹாலில் சென்றுபார்த்தபோது மூன்று பெண் குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அதன் அருகே கோவிந்தராஜ் பூச்சி மருந்து குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து கதறிய பாரதி, பக்கத்து வீட்டில் இருந்த நபரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.
உடனே பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அங்கு சென்று பார்த்தபோது, கடைசி குழந்தை மட்டும் துடித்த நிலையில் கிடந்ததாகவும், ஆம்புலன்ஸ் வருவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு வரை கோவிந்தராஜ் உயிருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
4 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது 4 பேருமே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் ,கோவிந்தராஜ் ரிக் எந்திரம் வாங்குவதற்கு என்று கடன் வாங்கி அந்த பணத்தில் வீடு கட்டியதாகவும், மனைவி பாரதி தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதும் தெரியவந்தது, மொத்தமாக 17 லட்சத்திற்கு மேலாக கடன் உள்ள நிலையில் கோவிந்தராஜ் மாதம் 27,000 என்ற முறையில் கடந்த 8 மாதங்களாக பணம் செலுத்தி வந்துள்ளார். அதே நேரத்தில் கோவிந்தராஜ் வெளியூருக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் மனைவியின் நடத்தை குறித்து தனது தாய் சொல்வதை கேட்டு சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது, ஒரு பக்கம் கடன் மறுபக்கம் மனைவி மீது தீராத சந்தேகம் என்ற குழப்பத்தில் சுற்றிய நிலையில் இந்த விபரீத சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் கோவிந்தராஜிற்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது, அதனை விற்றாலே கோடிக் கணக்கில் விலை போகும், ஆகவே அவர் கடன் சுமையால் இறக்கவில்லை என அவரது சகோதரர் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu