BIG STORIES
காதல் சகதியில் சிக்கி உயிரை மாய்த்தாரா மருத்துவ மாணவி..!? ஆண் நண்பர் எங்கே போனார் ?
Aug 06, 2025 01:04 AM
81
காதல் சகதியில் சிக்கி உயிரை மாய்த்தாரா மருத்துவ மாணவி..!? ஆண் நண்பர் எங்கே போனார் ?
சென்னை டி.பி சத்திரத்தில் ஆண் நண்பருடன் ஒரே அறையில் தங்கி இருந்த மருத்துவ மாணவி ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் திவ்யா(26) என்பவர் வேலூர் மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் முடித்துவிட்டு, தற்போது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
TP சத்திரம் தர்மராஜா கோவில் தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியாக தங்கிக் கொண்டு திவ்யா கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரது அறையில் ஆண் நண்பர் ஒருவரும் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது. சில மாதங்களாக அந்த ஆண் நண்பர் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
தினந்தோறும் திவ்யாவின் நண்பர்கள் இருசக்கர வாகனத்தின் மூலம் திவ்யாவை கல்லூரிக்கு அழைத்து வந்து பின் மாலை வீட்டில் கொண்டு சென்று விடுவது வழக்கம். செவ்வாய் கிழமை காலை திவ்யாவை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திவ்யா கதவை திறக்காமல் இருந்துள்ளார். மேலும், பலமுறை கால் செய்தும் அழைப்பை ஏற்கவில்லை
இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் மூவரும் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததாகவும், ஜன்னல் கம்பியில் கயிறால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததாகவும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
டிபி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்த பெண்ணின் சடலத்தை மீட்டு டிபி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திவ்யாவும் அவருடன் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஒரு மாணவரும் நட்பாக பழகியதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக லிவ் இன் காதலில் இருந்ததும் தெரியவந்தது.
திவ்யாவின் காதலர் தட்சிணா மூர்த்தியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து ஒரே வீட்டில் தங்கி வந்ததாகவும், 6 மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு தெரிந்த நிலையில் இருவரும் வேறு சாதி என்பதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். பின்னர் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் மருத்துவ படிப்பு முடிந்த பின்பு திருமணம் செய்து வைப்பதாக கூறியதாகவும் , அதற்குள் இப்படி ஒரு முடிவை எதற்காக எடுத்தார் ? என்பது தெரியவில்லை என்று தட்சிணாமூர்த்தி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
தான் தினந்தோறும் திவ்யாவை, அவர் தங்கியுள்ள வீட்டிலிருந்து கல்லூரிக்கு அழைத்து செல்வதும் பின்பு மாலையில் தனது நண்பர்களோடு சென்று திவ்யாவை வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்ததாக போலீசாரிடம் தெரிவித்த தட்சிணாமூர்த்தி , நேற்று மாலை 3 மணி அளவில் திவ்யா, தன்னிடம் நல்ல முறையில் பேசியதாகவும் கூறினார். ஆனால் காதலன் தட்சிணாமூர்த்தி சில மாதங்களாக அங்கு வரவில்லை என்று அருகில் கடை நடத்திவரும் பெண்மணி தெரிவித்தார்
சடலமாக மீட்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி வேலூர் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை கோல்ட் மெடலிஸ்ட் என்ற போலீசார் உயிரிழப்புக்கான காரணம் உறுதிபடுத்தப்படவில்லை என்றனர். மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கடைசியாக மாணவியின் வீட்டிற்கு யார் உள்ளே சென்று வந்தது என்பது குறித்தும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றதாக காதலனும் நண்பர்களும் தெரிவித்த நிலையில், கதவு உடைந்ததற்கான தடயம் இல்லை. அது குறித்து விசாரணை நடத்திய போது கதவை உடைக்க முற்பட்ட போது தாழ்ப்பாள் தானாக திறந்துவிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கைரேகை தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பதிவுகளை சேகரித்து வருகின்றனர்.
மாணவி திவ்யா தூக்கிட்டுக் கொண்டாரா? அல்லது தூக்கில் தொங்க விடப்பட்டாரா ? என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu