RECENT NEWS

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

Aug 06, 2025

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

Aug 06, 2025

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

Aug 06, 2025 01:21 AM

65

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது

சென்னையில் உள்ள லாரியை நேரில் பார்க்காமல் ஆவணங்களின் அடிப்படையில் போலியான நபருக்கு கடன் வழங்கி விட்டு , ஒரிஜினல் ஓனரிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்ததாக, ஈக்வட்டாஸ் வங்கிக்கு எதிராக லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதால், ஈக்வட்டாஸ் நிறுவனம் நாமக்கல் கிளையை தற்காலிகமாக மூடி உள்ளது.

சென்னையில் உள்ள லாரியை நேரில் பார்க்காமல் ஆவணங்களை மட்டும் பார்த்து போலியான நபரின் பெயரில் கடன் வழங்கி விட்டு, லாரியின் ஆர்சி புத்தகத்தில் உள்ள ஒரிஜினல் உரிமையாளர் பொன்னுரங்கத்திடம் இருந்து கந்து வட்டிக்காரன் போல லாரியை பறிமுதல் செய்தது தவறு என்று நாமக்கல் ஈக்வட்டாஸ் வங்கி முன்பு லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் ஈக்வட்டாஸ் நிறுவன ஊழியர்கள் செய்தது தவறு என்றும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை உரிமையாளர் பொன்னுரங்கத்திடம் திருப்பி ஒப்படைக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது

இதையடுத்து லாரியை பெற்றுக் கொள்வதற்காக லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பொன்னுரங்கம் நாமக்கல் ஈக்வட்டாஸ் வங்கிக்கு செவ்வாய் கிழமை சென்றார். அங்கு வங்கி பூட்டப்பட்டு இருந்தது. தங்களிடம் லாரியை திருப்பி தரக்கூடாது என்று திட்டமிட்டு வங்கியை பூட்டிவிட்டு ஈக்வட்டாஸ் ஊழியர்கள் தப்பி ஓடி விட்டதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லராஜாமணி தெரிவித்தார்

அதே நேரத்தில் வங்கிக்கு வந்து செல்லும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்தளம் அமைப்பதற்காக, தங்கள் வங்கி மூடப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒன்றை ஈக்வட்டாஸ் நிறுவனம் தரப்பில் ஒட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில், அலுவலகத்தை பூட்டியதற்கு ஈக்வட்டாஸ் நிறுவனம் தெரிவித்த விளக்கம் தான் இந்த ஆண்டுக்கான உட்ச பட்ச நகைச்சுவை என்கின்றனர் லாரி உரிமையாளர்கள். 3 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் 3 வது தளத்தில் ஈக்வட்டாஸ் வங்கி இயங்குகிறது. இந்த வங்கிக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்ல லிப்ட் வசதியும் உள்ளது. இந்த நிலையில் எங்கிருந்து சாய்தள வசதி செய்யப்போகிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே லாரி உரிமையாளர்களால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று 2 நாட்களாக வங்கி மூடப்பட்டதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இனிமே அவன் நமக்கு அடிமை..வங்கி கிளையை மூடிய ஈக்வட்டாஸ்.. சாதித்த லாரி உரிமையாளர்கள்...! காத்திருப்புக்கு பலன் கிடைத்தது
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies