RECENT NEWS

2 நாள் பயணமாக சீனா செல்கிறார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக சீனா செல்கிறார் பிரதமர் மோடி

Aug 06, 2025

2 நாள் பயணமாக சீனா செல்கிறார் பிரதமர் மோடி

2 நாள் பயணமாக சீனா செல்கிறார் பிரதமர் மோடி

Aug 06, 2025

BIG STORIES

அவரு ஆளுங்கட்சி பிரமுகரு...அந்த மாதிரி டார்ச்சர் பண்றாரு" குழந்தைகளோடு கைம்பெண் கதறல் ... தூங்காமல் காவல் காக்கும் சோகம்

Aug 06, 2025 07:24 AM

58

அவரு ஆளுங்கட்சி பிரமுகரு...அந்த மாதிரி டார்ச்சர்  பண்றாரு" குழந்தைகளோடு கைம்பெண் கதறல் ... தூங்காமல் காவல் காக்கும் சோகம்

அவரு ஆளுங்கட்சி பிரமுகரு...அந்த மாதிரி டார்ச்சர் பண்றாரு" குழந்தைகளோடு கைம்பெண் கதறல் ... தூங்காமல் காவல் காக்கும் சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், தட்டரஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தமிழ்செல்வி. இவரது கணவர் ராம்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட, நான்கு குழந்தைகளுடன் அரசு புறம்போக்கு நிலத்தில் 30 வருடமாக வசித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் உள்ள ஜூஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வரும் தமிழ்செல்வி, மின்சாரம், குடிநீர் என எவ்வித அடிப்படை வசதியுமின்றி குடிசையில் வசித்து வந்த நிலையில் மகளிர் சுய உதவிக்குழுவில் வழங்கப்பட சோலார் லைட்டை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.

வீட்டிற்கு மின்சாரம் இணைப்பு வேண்டுமென்றால், குடிசை வீடாக இருக்க கூடாது என அதிகாரிகள் கூறிய நிலையில், தமிழ்செல்வி குடிசை வீட்டினை மாற்றி ஷீட் அமைத்துள்ளார்.

குழந்தைகளின் படிப்பிற்கு மின்சாரம் தேவை என்பதால், மின்சார வசதி கேட்டு மின் வாரிய அலுவலகத்திற்கு தமிழ்செல்வி சென்றுள்ளார். அப்போது அவர்கள் புறம்போக்கு இடத்திற்கு மின் இணைப்பு வழங்க முடியாது. பட்டா வாங்கி வாருங்கள் தருகிறோம் எனக்கூறி அனுப்பி உள்ளனர்.

இதனால் அதே கிராமத்தை சேர்ந்த திமுக கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலையின் கணவருமான தட்ரஹள்ளி நாகராஜின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்ற தமிழ்செல்வி, குடியிருப்பிற்கு பட்டா வாங்க உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

அப்போது நாகராஜ், தனது வீட்டில் பாத்திரம் கழுவுவது, துடைப்பது, பாத்ரூம் கழுவுவது உள்ளிட்ட வேலைகளை செய்யுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

தனக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களை பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக உள்ளது. மேலும் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வருகிறேன். தனக்கு உடல்நிலையும் சரியில்லை என கூறி தமிழ்செல்வி வீட்டு வேலைகளை செய்ய மறுத்துள்ளார்.

இதனால் "நீ எப்படி அந்த வீட்டுல இருக்குறனு நான் பாத்துக்கறேன்" என நாகராஜ் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து குழந்தைகளோடு தனியாக வசித்து வரும் தமிழ்செல்வியின் வீட்டிற்கு இரவில் சிலர் மது அருந்திவிட்டு வந்து கதவை தட்டியும், சிலர் வீட்டின் மீது கற்களை வீசியும் தொல்லை கொடுத்தும் வருவதாக கூறப்படுகின்றது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ் செல்வி, இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும், திமுக பிரமுகர் நாகராஜை பகைத்துக்கொள்ள வேண்டாம் என கூறி போலீசாரே வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.

தினமும் நடக்கும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், பாதுகாப்பிற்காக மிளகாய் பொடியும், உருட்டு கட்டைகளையும் ரெடியாக வைத்து கொண்டு இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லாமல் அவஸ்தை பட்டு வருவதாக தமிழ்செல்வி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு, கையில் நோட்டீசுடன் வந்த கிராம நிர்வாக அதிகாரி, பட்டா வந்துள்ளது, ஒரு கையெழுத்து போடுங்கள் என கேட்டுள்ளார். அந்த பேப்பரில் அரசு முத்திரை ஏதும் இல்லை எனக்கூறி தமிழ் செல்வி கையெழுத்து போட மறுத்துள்ளார்.

ஆனால் நள்ளிரவில் வீட்டின் கதவில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும், இல்லையென்றால் போலீசாரை அழைத்து வந்து ஜேசிபி மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விடுவோம், உள்ளே நீங்கள் இருந்தாலும், நீங்கள் செத்தாலும் இந்த வீட்டை இடிக்காமல் விடமாட்டோம் என அதிகாரிகள் மிரட்டியதாக தமிழ்செல்வி வேதனையோடு தெரிவித்துள்ளார்.

30 வருடமாக அங்கு வசித்து வரும் தனது குடும்பத்திற்கு பட்டாவும், மின்சார வசதியும் ஏற்படுத்தி தருமாறு தமிழ் செல்வி கைகளை கூப்பி மன்றாடி கோரிக்கை வைத்துள்ளார்.

அதே நேரத்தில் அந்த பகுதியில் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம், தன்னுடன் தனிமையில் இருந்தால், வீடு கட்டி தருவதாக 5,6 வருடங்களாக மிரட்டுவதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதுகுறித்து தட்ரஹள்ளி நாகராஜிடம் நமது செய்தியாளர் போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானது என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் மாவட்ட செயலாளாரிடம் கேட்டுவிட்டு தான் பேசுவதாக கூறி இணைப்பை துண்டித்தார்.

 தனி ஒரு பெண்ணாக அத்தனை குழந்தைகளையும் படித்து ஆளாக்குவது என்பது கடினமானது என்றாலும் அரசும் மாவட்ட நிர்வாகமும் அந்த பெண்ணுக்கும் அவரது குழந்தைகளுக்கும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

அதே நேரத்தில் வறுமையில் வாடுவோருக்கு தக்க வழி சொல்ல வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படி அத்து மீறலில் ஈடுபட்டால், பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும், ஆட்சிக்கும் அது கெட்ட பெயரை பெற்றுதரும் என்பதை உணர்ந்தாவது இது போன்ற குற்றச்சாட்டுகள் தங்கள் மீது எழாமல் நடந்து கொள்வது காலத்தின் கட்டாயம். விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தினாலும்... கருணை காட்டாமல் மிரட்டிப்பார்த்தாலும் குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

உடுமலை அருகே எஸ்.எஸ்.ஐ. கொடூரக்கொலை.. எம்.எல்.ஏ.வின் தென்னந்தோப்பில் நடந்தது என்ன? ..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies