BIG STORIES
முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற கணவர்.. புதுப்பெண் அறையில்... காத்திருந்த அதிர்ச்சி; பரபரப்பு!
Aug 06, 2025 02:21 PM
39
முதலிரவுக்கு ஸ்வீட் வாங்க சென்ற கணவர்.. புதுப்பெண் அறையில்... காத்திருந்த அதிர்ச்சி; பரபரப்பு!
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், சோமண்டேபள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் வரலட்சுமி தம்பதியின் ஒரே மகள் ஹர்ஷிதா. 22 வயது ஹர்ஷிதா ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்துவந்தார். இந்த நிலையில் இவருக்கும், கர்நாடகாவின் பாகேபள்ளியைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் கடந்த 4ஆம் தேதி காலை திருமணம் நடந்தது. திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த மகிழ்ச்சியில் இருவீட்டாரும் இருந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, புதுமண தம்பதி இருவரையும், பெண்ணின் வீட்டிற்கு அழைத்துசென்றனர். அங்கு முதல் இரவுக்கான ஏற்பாடுகளை உறவினர்கள் மும்முரமாக செய்துவந்துள்ளனர். அப்போது மணமகன் நாகேந்திரா, இனிப்புகளை வாங்க வீட்டின் அருகே இருக்கும் கடைக்கு சென்றிருக்கிறார். பின்னர் நாகேந்திரா வீடு திரும்பியபோது, ஹர்ஷிதா இருந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதையடுத்து நாகேந்திரா கதவை தட்டி, குரல்கொடுத்து ஷர்ஷிதாவிடம் கதவை திறக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஹர்ஷிதா கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்திருக்கின்றனர்.
அப்போது முதலிரவுக்காக தயார் செய்யப்பட்ட அறையிலேயே, ஹர்ஷிதா தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து அவரை மீட்டு, உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹர்ஷிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது இரு குடும்பத்தினரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ஹர்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிச்சோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் ஹர்ஷிதாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
திருமணத்தின்போது மணமகள் ஹர்ஷிதா எந்த சோகமுமின்றி, சிரித்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது.. இது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமும் தெரிகிறது. இருப்பினும் ஹர்ஷிதாவுக்கு உண்மையில் இந்த திருமணத்தில் விருப்பமில்லையா? காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்திவருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu