BIG STORIES
முடிஞ்சா பார்த்துக்கோங்கடி” குழந்தை கழுத்தறுத்த தகப்பன் சவால்.. தடுக்கத் தவறிய மகளிர் காக்கிகள்.. வெளியான அதிர்ச்சி ஆதாரங்கள்!
Aug 06, 2025 02:24 PM
34
எந்த போலீஸ் ஸ்டேஷனாலும் போங்க. கோர்ட்டு போங்க. பணத்தை கொட்டுவேன். பணத்தை கொட்டுவேனா, இறக்குவேன். ஆடி கார்ல அட்வேகேட்டை இறக்குறேன். உன் பிச்சைக்காரன் அப்பன் என்னப் பன்றான்னு பாரு. சத்தியமா நான் சேலஞ்ச் பன்றேன். இன்னா பன்றியோ பண்ணு”
7 வயது மகளை, தனியார் ஹோட்டலில் வைத்து கழுத்தை அறுத்து படுகொலை செய்த சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவைச் சேர்ந்த கொடூர தகப்பன் சதீஷ்குமாரின் மிரட்டல் வாய்ஸ் மெசேஜ்கள்தான் இவை.
இதேபோல், பலமுறை அவரது மனைவி ரெபாக்கா வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்று கொலை மிரட்டல் விடுத்த வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இது தொடர்பாக கடந்த 7-9-2024 அன்று ஓட்டேரி காவல்நிலையத்திலும் 9-9-2024 அன்று புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ரெபாக்கா புகார் அளித்துள்ளார். ஆனாலும், சதீஷ்குமாரின் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்ததால் மீண்டும் 14-9-2024 அன்று சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் செய்யும் கொடுமைகள் குறித்து ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஓட்டேரி காவல்நிலையத்திலும், புளியந்தோப்பு மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தபிறகும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 24-12-2024 அன்று சென்னை காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார்.
அதுவும், சதீஷ்குமார் பேசும் ஒரு வாய்ஸ் மெசேஜில் “செம்ம சீன் ரி... காலையிலேயே உட்கார்ந்து படிச்சிக்கிட்டிருக்கேன். ஹஸ்பண்டை உட்டுட்ட. ரஞ்சனி... ரஞ்சனி... ரஞ்சனி... ஹஸ்பண்ட் மாம் ரஞ்சனின்னு வெய்ட்டா எழுதிக்கிற. வீட்டுக்கிட்ட வந்துடாத... மண்டைய கிழிக்கிறியா? என்னைக்கே அவ தேவையில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்” என பேசுகிறார். அந்த வாய்ஸ் மெசேஜில் அவரது அம்மாவோ சகோதரியோ “மண்டைய கிழிக்கணும்” என்று தூண்டி விடுவதுபோல், பதிவாகியுள்ளது.
இப்படி, காவல்நிலையங்களில் சதீஷ்குமார் குறித்தும் அவரது குடும்பத்தினரின் வன்முறை குறித்தும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக விட்டதன் விளைவுதான், தனது 7 வயது மகளை தன்னிடம் ஒப்படைக்காமல் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டதாகவும், இதற்கெல்லாம் காரணமாக இருந்த சதீஷ்குமாரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குழந்தையை பறிகொடுத்த தாய் ரெபாக்கா கண்ணீரோடு டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறும்போது, ஏற்கனவே சதீஷ் குடித்துவிட்டு பலமுறை எங்களது வீட்டில் வந்து பிரச்சனை செய்ததாகவும், கத்தியுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இது குறித்து வீடியோ ஆதாரங்களுடன் பலமுறை புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் மற்றும் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதன் காரணமாகத்தான் தனது குழந்தையை தற்போது நான் இழந்து உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, புளியந்தோப்பு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது தனது குழந்தையின் கொலை வழக்கை விசாரணை செய்து வரும் விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் கடந்த ஒரு வருடமாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையம், ஓட்டேரி காவல்நிலையம் உட்பட காவல்துறையில் புகார் அளித்தபோது முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் தனது குழந்தை தற்போது உயிரோடு இருந்திருக்கும் என்றும் தனது கணவன் சதீஷ் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.
இதுகுறித்து எல்லாம் பலமுறை புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை. காவல்துறை லஞ்சம் வாங்கிக் கொண்டு தனது கணவர் சதீஷ்குமார் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் பல காலமாக விட்டு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஏழு வயது குழந்தையை கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தபோது அந்த குழந்தை எவ்வளவு துடித்திருக்குமோ அந்த அளவிற்கு சதீஷ்குமார், சாகும் வரை வெளியே வராத அளவிற்கு, சிறையிலேயே இருக்க வேண்டும் என கண்ணீர் மல்க குழந்தையின் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu