BIG STORIES
ஆட்டத்துக்கு வந்த அம்மணி.. அதிபரின் நகையுடன் ஓட்டம்.. சபலத்தால் பறிபோன பின்னணி..! காதல் கடலில் நீச்சல் - பெண் சிக்கினார்
Aug 06, 2025 04:00 PM
81
ஆட்டத்துக்கு வந்த அம்மணி.. அதிபரின் நகையுடன் ஓட்டம்.. சபலத்தால் பறிபோன பின்னணி..! காதல் கடலில் நீச்சல் - பெண் சிக்கினார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் மது அருந்தி ஆட்டம்போட்ட தொழில் அதிபருடன் ஒரே அறையில் தங்கிய பெண்மணி 10 சவரன் நகையை திருடிக் கொண்டு மாயமான நிலையில் 2வது காதலனுடன் கைது செய்யபட்டார்.
ஆவடியை சேர்ந்த 47 வயதான தொழிலதிபர் மணி. கடந்த மாதம் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஓட்டலின் மதுபான கூடத்தில் மது அருந்தினார். அங்கு இவருக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான தோழி தீபிகா என்கிற தீபலட்சுமி மது அருந்த வந்துள்ளார்.
பின்னர் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு ஜாலியாக ஆட்டம் போட்டதோடு அங்கேயே அறை எடுத்து தங்கி உள்ளனர். 28ஆம் தேதி காலை 10 மணிக்கு போதை தெளிந்து கண் விழித்துப் பார்த்த மணி தனியாக இருந்துள்ளார். அவரது கழுத்தில் கிடந்த பத்து சவரன் தங்க சங்கிலியையும் காணவில்லை, அவருடன் தங்கி இருந்த தோழியையும் காணவில்லை.
இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த மணி , நகை கொள்ளை தொடர்பாக தனது தோழி தீபிகா மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் குன்றத்தூரை சேர்ந்த தீபிகாவை பிடித்து விசாரித்த போது , தீராத காதல் விளையாட்டு பிள்ளையாக ஓட்டல் ஓட்டலாக வலம் வந்து, நகை பணம் திருடிச் செல்லும் தீபிகாவின் களவாணி கைவரிசை வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த 27 ஆம் தேதி தொழில் அதிபர் மணியுடன் மது அருந்திவிட்டு, அறையில் ஒன்றாக தங்கி உள்ளார் தீபிகா. மணி போதை தலைக்கேறிய நிலையில் மட்டையானதும் , தனது புதிய காதலர் சதீஷ்குமார் என்பவரை வரவழைத்து, மணியின் கழுத்தில் கிடந்த பத்து சவரன் தங்க சங்கிலியை திருடி கொண்டு இருவரும் எஸ்கேப் ஆகி உள்ளனர். பின்னர் அந்த நகையை மறு நாளே விற்று பணமாக்கி ஏற்காட்டிற்க்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர்.
தீபிகா ஏற்கனவே காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ளது. இவருடைய செயல்பாடுகள் சரியில்லாததால் முதல் கணவர் பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் தவறான நபர்களின் அறிமுகத்தால் மது பழக்கத்துக்கு அடிமையானதுடன், பல ஆண் நண்பர்களின் தொடர்பும் தீபீகாவுக்கு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பப்புக்கு சென்று மது அருந்திவிட்டு அவர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதை தீபிகா வழக்கமாக்கி உள்ளார்.
இந்த நிலையில் தான், மாம்பலத்தை சேர்ந்த ஆக்டிங் கார் டிரைவர் சதீஷ்குமாருடன் 2 வதாக காதல் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார்.
அவ்வபோது போனில் அழைக்கும் ஆண் நண்பர்களுடனும் சென்று ஜாலியாக மது அருந்தி காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டு , சம்பந்தப்பட்ட ஆண் நண்பர் போதையில் மயங்கியதும் அவரிடம் இருந்து நகை பணம் என உடைமைகளை காதலனுடன் சேர்ந்து களவாடி செல்வதை வழக்கமாக செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இவரிடம் ஏமாந்த பலர் வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்து இவர் மீது புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பலரிடம் கைவரிசை காட்டி உள்ளார் எனவும், தற்போது தான் முதல் முறையாக சிக்கி உள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து நகைக் கொள்ளை வழக்கில் தீபீகாவையும், அவரது காதலர் மாம்பலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சதீஷ்குமார் என்பவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 லட்ச ரூபாய் ரொக்கம், விலை உயர்ந்த கேடிஎம் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu