BIG STORIES
ஒற்றை செல்போனால்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. போலீசாரை திணறடித்த சம்பவம்!
Aug 06, 2025 04:37 PM
20
ஒற்றை செல்போனால்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை.. போலீசாரை திணறடித்த சம்பவம்!
டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார், நீண்ட கால குற்றப் பின்னணி கொண்ட குற்றவாளிகளை தேடிவந்தனர். அப்போது முக்கிய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ப்ரீதம் பிரகாஷ் என்பவர், பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ப்ரீதம் பிரகாஷைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் ப்ரீதம் பிரகாஷை போலீசாரால் நெருங்க முடியவில்லை. இதையடுத்து குற்றவாளி ப்ரீதம் பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து ஆராய முயற்சி செய்தனர். அப்போது அவரின் செல்போன் உபயோகத்தில் இருந்து வந்ததும், அது ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் இருப்பது போன்றும் காட்டியது.
அதைத்தொடர்ந்து சோனிபட் விரைந்த போலீசார், சிக்னலை வைத்து ட்ராக் செய்ததில், அந்த செல்போனை டாக்ஸி ஓட்டுநர் ரோஹித் என்பவர் பயன்படுத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை காவல்நிலையம் அழைத்து விசாரணையை தொடங்கினார். முதலில் தான் வேறொருவரிடமிருந்து செல்போன் விலைக்கு வாங்கியதாகக் ரோஹித் கூறினார்.
ஆனால் அதனை நம்பாத போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையைத் தொடங்கினார். விசாரணையில் ப்ரீதமை, அவரது மனைவி உடன் சேர்ந்து கொன்றதை ஒப்புகொண்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ப்ரீதம் மனைவி சோனியாவையும் அழைத்து விசாரணை தொடங்கினர்.
கொலையான ப்ரீதம் பிரகாஷை, சோனியா தனக்கு 16 வயது இருக்கும்போதே காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்திருக்கிறார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். டெல்லியின் அலிப்பூரில் வசித்து வந்த ப்ரீதம் போதைப்பொருளுக்கு அடிமையாகி, சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருத்தல், கொள்ளை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
ப்ரீதமின் நடவடிக்கையை விரும்பாத சோனியா, அவரின் குற்றத்தை நிறுத்த பலமுறை முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை. மேலும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தன்னை தொடர்ச்சியாக தாக்கி வந்ததாக சோனியா, போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதற்கிடையே கடந்த 2023 ஆம் ஆண்டில், டாக்ஸி ஓட்டுநரான ரோஹித்துடன் சமூக வலைத்தளம் மூலம் நட்பாகி இருக்கிறார். பின்னர் இருவருக்கும் ஒருவரை ஒருவரை பிடித்துபோக, இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் ப்ரீதம் அதற்குத் தடையாக இருப்பார் என எண்ணி இருவரும் பொறுமையாக இருந்துள்ளனர்.
அதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி, மீண்டும் ப்ரீதமுடன், சோனியாவுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சோனிபட்டில் உள்ள தனது சகோதரி தீபாவின் வீட்டிற்கு கிளம்பியிருக்கிறார். சோனியாவை, ரோஹித் சோனிபட்டிற்கு காரில் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ப்ரீதமை கொலை செய்துவிடலாம் என ரோஹித் சோனியாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு முதலில் சோனியா மறுத்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, சோனியாவை வீட்டிற்கு அழைத்து வர ப்ரீதம் சோனிபட்டிற்குச் சென்றார். அப்போது சோனியா வர மறுத்ததால், அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சோனியா ப்ரீதமை கொல்ல முடிவு செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தனது சகோதரியின் மைத்துனர் விஜய் என்பவரிடம் கொலை செய்ய 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் திட்டமிட்டபடி, அன்றிரவு தனது சகோதரியின் வீட்டில் ப்ரீதமை தங்க வைத்துள்ளார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த ப்ரீதமை, விஜய் கத்தியால் குத்தி கொன்றார்.
பிறகு அவரது உடலை கவரில் சுற்றி எடுத்துச்சென்று, ஒரு கால்வாய் அருகே வீசினர். பின்னர் அடுத்த நாள் காவல்நிலையம் சென்ற சோனியா, தனது கணவரை காணவில்லை என புகாரும் அளித்திருக்கிறார்.
ப்ரீதம் உடலை வீசுவதற்கு முன் அவரிடம் இருந்த செல்போனை எடுத்து வைத்திருந்த சோனியா, அதனை ரோஹித்திடம் கொடுத்து அழித்துவிடும் படி கூறியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ரோஹித் அந்த செல்போனை அழிக்காமல் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இதுதான் ஒரு பெரும் கொலையை கண்டுபிடிக்க துருப்புச் சீட்டாக அமைத்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து ப்ரீதம் உடலை அந்த கால்வாய்யில் இருந்து கைப்பற்றிய போலீசார் சோனியா, ரோஹித் மற்றும் விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட ரோஹித் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. ரோஹித் மற்றும் சோனியா இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்துகொண்டிருக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu