BIG STORIES
எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்... ஆடு திருட்டு வழக்கில் 3 சூனா பானாக்கள் கைது..
Aug 06, 2025 04:40 PM
17
எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்... ஆடு திருட்டு வழக்கில் 3 சூனா பானாக்கள் கைது..
ஆடு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று சூனாபானாக்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னையை அடுத்த ஆவடி, முத்தா புதுப்பேட்டை பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில், கால்நடை வளர்த்து வருபவர்களின் ஆடுகள் தொடர்ந்து திருடு போவது குறித்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில், முத்தாப்புதுப்பேட்டை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் பாட்டி மாரியம்மாள் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த, 12 ஆடு மற்றும் 8 ஆட்டு குட்டிகள் காணாமல் போனது குறித்து குமார், முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த நான்காம் தேதி புகார் அளித்தார்.
அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகள் காணாமல் போவது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்த படியே, பின் தொடர்ந்த போலீசார் கோயம்பேடு நெற்குன்றம் வரை சென்றதின் பயனாக, இருசக்கர வாகனத்தில் ஆடுகளை கொண்டு செல்லும் காட்சிகள், ஆடுகளை திருடி சென்ற சூனாபானாக்களை அடையாளம் காண உதவியது.
துருப்புச் சீட்டாக சிக்கிய சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, நெற்குன்றம் பகுதியில் வசித்த பாபு, விமல்ராஜ் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், கறிக் கடைக்காக வாங்கிய ராஜகோபால் என்பவரையும் கைது செய்து, முத்தா புதுப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து கௌரவத்துடன் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கிராமப்புறங்களில் ஆடுகளை திருடினால் எங்கும் சிக்க மாட்டோம், ஏனென்றால் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருக்காது, அப்படியே இருந்தாலும் நெற்குன்றம்வரை குறுக்கு சந்து வழியாக சென்றால், பின் தொடர்வதில் போலீசாருக்கு சிரமம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களை யாரும் நெருங்க முடியாது என்ற எண்ணத்தில் இருந்தது மட்டுமல்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நூறு ஆடுகளை திருடி கறிக் கடைகளுக்கு விற்று பணம் சம்பாதித்து வந்ததாக ஆடு திருடர்கள் பாபு, விமல் ராஜ் அளித்த வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது. திருடிய ஆடுகளை வாங்கிய குற்றத்திற்காக கடை உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து 20 ஆடுகள் மீட்கப்பட்ட நிலையில், ஆடு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று சூனா பானாக்களும் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu