BIG STORIES
எஸ்.எஸ்.ஐ கழுத்தை துண்டாக்கி அரிவாளுடன் சுற்றும் கொடூரன்..துப்பாக்கியுடன் தேடும் போலீஸ்..! இறுதியில் இரும்புக்கரம் பாயுமா..?
Aug 07, 2025 02:00 AM
31
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிக்கனூத்தில் மடத்துகுளம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமாக 40 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. அந்த தென்னந்தோப்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவரும் அவரது இரு மகன்களான தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோரும் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை தொடர்பாக தந்தை மூர்த்திக்கும் மகன்கள் தங்கபாண்டி மற்றும் மணிகண்டனுக்கு இடையே செவ்வாய்கிழமை இரவு 11 மணிக்கு தோட்டத்தில் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, தகராறு முற்றிய நிலையில், தந்தை மூர்த்தியை மகன்கள் இருவரும் தோட்டத்துக்குள் வைத்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து தோட்டத்து மேலாளர் ரங்கசாமி குடிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ.சண்முக வேலை தோட்டத்திற்கு செல்லுமாறு கூறி உள்ளார். இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனத்தில் எஸ்.எஸ்.ஐ சண்முக வேல் தோப்புக்கு சென்றுள்ளார். வாகனத்தை ஆயுதப்படை காவலர் அழகுராஜ் ஓட்டிச்சென்றார். தோப்புக்கு வெளியே நின்ற மேலாளர் ரங்கசாமியும் போலீசாருடன் உள்ளே சென்றுள்ளார்.
கையில் அரிவாளுடன் நின்றிருந்த மணிகண்டனிடம் அரிவாளை கீழே போடச்சொன்ன சண்முகவேல், காயத்துடன் நின்ற முதியவர் மூர்த்தியை மீட்டு மருத்துவமனை அழைத்துச்செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து மணிகண்டனையும், தங்கபாண்டியையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து வர முயன்றுள்ளார். அப்போது, எஸ்.எஸ்.ஐ.யிடம் தங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிட வேண்டாம் என தங்கபாண்டியும், மணிகண்டனும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் தங்கபாண்டி எஸ்.எஸ்.ஐ சண்முகவேலை தள்ளி உள்ளார் , கையில் அரிவாளுடன் நின்றிருந்த மணிகண்டன எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலை ஏறி மிதித்து கீழே சாய்த்து கழுத்தை துண்டாக வெட்டியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, தன்னை பிடித்து இழுத்த ஆயுதப்படை காவலர் அழகுராஜையும், மேலாளர் ரங்கசாமியையும் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டிய நிலையில் அழகுராஜ் மட்டும் லேசான காயத்துடனும், ரங்கசாமி உயிரை கையில் பிடித்துக் கொண்டும் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்ததாக கூறப்படுகின்றது.
அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் போலீஸ் வாகனத்தையும் அடித்து உடைத்து மணிகண்டன் சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. விசாரணைக்கு சென்ற நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் இருந்து காவல் நிலையத்துக்கு எந்த தொடர்பும் இல்லாததால், அழகுராஜின் செல்போனை தொடர்பு கொண்ட போது , தோப்பில் சண்டையிட்டவர்கள் எஸ்.எஸ்.ஐ சண்முகவேலை வெட்டிக் கொன்று விட்ட தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் பெரும்படையுடன் தோப்புக்கு சென்ற நிலையில் முகத்தில் காயத்துடன் நின்ற மூர்த்தி, எஸ்.எஸ்.ஐ கொலையில் தொடர்புடைய மணிகண்டன் மற்றும் தங்கப்பாண்டி ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. தப்பி ஓடிய 3 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது என்றும் அவர்களை 6 தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார்
தனது தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய எம்.எல்.ஏ. மகேந்திரன், மேலும், கொலை செய்த நபர்களின் ஆதார் ஆவணங்கள், தொலைபேசி எண்களை போலீசாரிடம் வழங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்
சம்பவ இடத்தை பார்வையிட்ட தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், கொலை சம்பவம் எப்படி நடந்தது ? என்பதை கேட்டறிந்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க அறிவுறுத்தினார்
தந்தையை இழந்த துக்கத்தில் ஔது கொண்டிருந்த எஸ்.எஸ்.ஐ சண்முக வேலுவின் mஅகனுக்கு ஆறுதல் கூறினார்
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் , கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ சண்முக வேலுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலில் செலுத்தினார். டிஜிபி சங்கர் ஜிவாலும், ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், ஐ.ஜி செந்தில்குமார் ஆகியோர் சக் காவலர்களுடன் எஸ்.எஸ்.ஐ சண்முக வேலுவின் உடலை சுமந்து சென்றனர்
பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது. எஸ்.எஸ்.ஐ சண்முக வேலு படுகஒலை சம்பவத்துக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கணடணத்தை தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் தந்தை மூர்த்தி, இளைய மகன் தங்கப்பாண்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும், கையில் அரிவாளுடன் தலைமறைவாக உள்ள மணிகண்டனை பிடிக்க கையில் துப்பாக்கியுடனும், மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரை அரிவாளால் தாக்கி கொன்றதற்கு தக்க பதிலடி கொடுத்து இழந்த பெருமையை மீட்க தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றது.
போதையில் தன்னிலை மறந்து செய்தாலும்.. ஆத்திரத்தில் ஆக்ரோசமாக செய்தாலும்.. காவல் அதிகாரியை மிரட்ட செய்தாலும் கொலை கடுங்குற்றம்... அந்த குற்றம் கேடு தரும்..!
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu