BIG STORIES
பள்ளி மாணவியை 40+ களுக்கு அனுப்பிவைத்த ‘ஆ’பாச பெற்றோர்.. வசமாக சிக்கும் 13 வி.ஐ.பிகள்.. 'அப்பா...அப்பா...' அழைத்த மகளையே!
Aug 08, 2025 03:23 PM
144
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த, முதுகரை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், கோடை விடுமுறையின்போது, தனது பெற்றோரால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக, விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்தபோது, ஆசிரியரிடம் அழுது கொண்டே தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனே, பள்ளி ஆசிரியை இதுகுறித்து சைலடு லைனுக்கும், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் முதுகரை பகுதியைச் சேர்ந்த மற்றொரு முருகன் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பள்ளி மாணவியின் தாயாருக்கு, 40 வயதுக்குமேற்பட்ட ‘uncle bestie’-கள் நெருக்கம் அதிகம் என கூறப்படுகிறது. மேலும், முதலாவது, இரண்டாவது கணவர்களிடமிருந்து பிரிந்து மூன்றாவது கணவர் முருகன் என்பவருடன் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது கணவன் முருகனோ, ‘அப்பா... அப்பா...’ என அன்போடு அழைத்த மகளையே, பாலியல் வன்முறை செய்ததாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, மனைவியின் முந்தைய கணவருக்கு பிறந்த குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மூன்றாவது கணவன், அடுத்தடுத்து 40 வயதிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்ட 13 க்குமேற்பட்ட வல்லூறன்களுக்கு அனுப்பிவைத்து பணம் சம்பாதித்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ள்து.
மேலும், வல்லூறன்களின் வீடுகளுக்கு அனுப்பியதோடு, மதுராந்தகத்தில் உள்ள ஒரு லாட்ஜை புக் செய்து வழக்கமாக அங்கே மாணவியை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், உடல் வலியாலும் மன வலியாலும் பத்தாம் வகுப்பு மாணவி கடுமையான துன்பத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், இப்படிப்பட்ட கொடூர தாய்- தகப்பனிடமிருந்து தப்பிக்க, அரசுப்பள்ளியின் விடுதியிலேயே தங்கிய மாணவியை, ‘லீவு நாட்களிலாவது வந்து செல்’ என அந்த கொடூர பெற்றோர் பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, தனது பள்ளி ஆசிரியர்களிடம் விஷயத்தை சொல்லி கதறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து, சைல்டு ஹெல்ப் லைன் நம்பர் (1098) பத்து, ஒன்பது எட்டுக்கு புகார் தெரிவிக்க, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையிலான குழு மாணவிக்கு தைரியம் மற்றும் ஆறுதல் கூறி, போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் 13 க்குமேற்பட்ட 40 வயதிலிருந்து 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் தன்னை அனுப்பிவைத்ததாக அதிர்ச்சியூட்டும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்துதான், மாணவியின் தாய்- மூன்றாவது கணவன் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதோடு, மாணவி கூறிய 13 பேரில் மற்றொரு முருகன், செல்வம் ஆகியோரையும் அதிரடியாக கைது செய்துள்ளது, காவல்துறை. மீதமுள்ளவர்களையும் தேடி வருகிறது, காவல்துறை.
தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொண்ட மாணவியை மேல்மருவத்தூர் போலீசார் பாராட்டியதோடு, பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். படிக்கவைத்து, வேலைக்கு அனுப்பிவைக்கவேண்டிய பெற்ற தாயே, பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திவருகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu