RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

BIG STORIES

பள்ளி மாணவியை சீரழித்த 13 பேருக்கு போலீஸ் வலை.. தாய் உள்ளிட்ட 4 பேர் கைது.. குழந்தை பாதுகாப்பு நீதிபதி அதிரடி..

Aug 08, 2025 03:49 PM

124

பள்ளி மாணவியை சீரழித்த 13 பேருக்கு போலீஸ் வலை.. தாய் உள்ளிட்ட 4 பேர் கைது.. குழந்தை பாதுகாப்பு  நீதிபதி அதிரடி..

பள்ளி மாணவியை சீரழித்த 13 பேருக்கு போலீஸ் வலை.. தாய் உள்ளிட்ட 4 பேர் கைது.. குழந்தை பாதுகாப்பு நீதிபதி அதிரடி..

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை , கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பெற்ற தாய் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோடை விடுமுறையை கொடுமை களமாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் , வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்ட நிலையில், அந்த பெண்மணி , 9 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு அறிமுகமான ஆண் நண்பரின் காதல் வலையில் விழுந்த அந்த பெண்மணி அவருடன் செங்கல்பட்டுக்கு தனது இருப்பிடத்தை மாற்றினார்.

மாணவி செங்கல்பட்டு அருகே உள்ள சமூக நீதி விடுதியுடன் கூடிய அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். மற்ற மாணவிகள் எல்லாம் ஞயிற்றுக்கிழமை தங்கள் வீடுகளுக்கு சென்ற நிலையில், தாய் வந்து அழைத்தும் அந்த மாணவி வீட்டிற்கு செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்து விடுதியில் உள்ள ஆசிரியை ஒருவர் விசாரித்த போது, கோடை விடுமுறையில் வீட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து விவரித்து அந்த மாணவி கதறி அழுததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அந்த ஆசிரியை, குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்துக்கு தொடர்பு கொண்டு மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்துள்ளார். அங்குள்ள நீதிபதியிடம் மாணவி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

தந்தை விட்டுச்சென்றதால் , தாயின் ஆண் நண்பருடன் செங்கல்பட்டுக்கு குடி பெயர்ந்த பின்னர் , முருகன் என்ற பெயர் கொண்ட அந்த நபர் தாயை மட்டுமல்லாமல் அந்த மாணவியையும் தனது இச்சைக்கு இரையாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த அசிங்கத்துக்கு தாயே உடந்தையாக இருந்தது தான் கொடுமையிலும் கொடுமை. அத்தோடு விடாமல் தாய்க்கு பணம் தேவை பட்டதால் அவரது தூண்டுதலின் பேரில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு முருகன், செல்வம் என பார்த்தால் அடையாளம் காட்ட இயலும் 13 பேர் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் , மே மாதங்களில் மட்டும் பலமுறை அந்த மாணவியை அவரது தாய் செங்கல்பட்டு, மேல் மருவத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

எப்போது பள்ளி திறக்கும் இந்த கொடுமையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று அந்த மாணவி ஏங்கித் தவித்த நிலையில், அந்த மாணவியை அரசு சமூக நீதி விடுதியுடன் கூடிய அரசு பள்ளியில் சேர்த்து உள்ளார் அவரது தாய்.

இதனை தனக்கு கிடைத்த பாதுகாப்பாய் நினைத்த அந்த மாணவி இனி வீட்டிற்கு செல்லப்போவதில்லை என்று முடிவெடுத்து தனது வாழ்க்கையை சீரழித்தவர்களை அடையாளம் காட்டியதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் நீதிபதியின் உத்தரவின் பேரில் அந்த மாணவியின் தாய், தாயின் காதலனான முருகன், மற்றொரு முருகன் , செல்வம் ஆகிய 4 பேரை போக்சோ வழக்கில் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மாணவியின் மீது கை தான் வைத்தோம் தவறு செய்யவில்லை என்று கைதானவர் தெரிவித்த நிலையில் மைனர் சிறுமி மீது தவறாக தொடுதலும் தண்டனைக்குரிய குற்றம் என்று சுட்டிக்காட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்போன் தொடர்பு எண்களை கைப்பற்றி உள்ள போலீசார் அந்த மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மேலும் 10 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதே போல கடந்த 2020 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாருக்குள்ளான காவல் ஆய்வாளர், அரசியல் பிரமுகர் என கைது செய்யப்பட்ட 21 பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் கம்பி எண்ணி வருவது குறிப்பிடதக்கது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies