BIG STORIES
“வேலையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும்..”வார்த்தையால் வெளுத்த டிஜிபி..! மாணவர்களுக்கு சொன்ன புத்திமதி
Aug 09, 2025 01:11 AM
95
“வேலையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும்..”வார்த்தையால் வெளுத்த டிஜிபி..! மாணவர்களுக்கு சொன்ன புத்திமதி
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக ரெயில்வே காவல்துறை டிஜிபி வன்னியபெருமாள், ரெயில்களில் கெத்துக் காட்டும் மாணவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே நகைச்சுவையாக புத்திமதி சொன்னார்.
சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழக ரெயில்வே காவல்துறை டிஜிபி வன்னியபெருமாள் , வேளையத்தவன் மூளையில் சாத்தான் குடியிருக்கும் என்றும் போலீஸ் Verify செய்து Yes சொன்னால் தான் Private-ல் உங்களுக்கு வேலையே கிடைக்கும் என்றார்
அர்த்தமற்ற கெத்து என்ற வார்த்தை ஒருவித தாழ்வு மனப்பான்மையே எனக் கூறப்படும் நிலையில், பெண்களுக்கு முன்னால் ஹீரோயிசம் காண்பிப்பது, ரயில் படிக்கட்டின் பக்கவாட்டு ஜன்னலில் தொங்குவது, கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது, படிக்கட்டில் நின்றபடி பந்தா காட்டுவது எல்லாம் கெத்தல்ல...என்றார்
கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என்று சொன்ன பாரதியார் போல், எனக்கு கணக்கு பிடிக்காது என்று டிஜிபி வன்னியபெருமாள் பேசியபோது, மாணவர்கள் விசில் அடித்து அரங்கத்தை அலற விட்டனர்
சமீபத்தில் ரயிலில் எறியப்பட்ட கல்லால், அதில் பயணித்த கர்ப்பிணி ஒருவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. உங்களுக்குள் உள்ள சண்டையில் அந்த கர்ப்பிணி என்ன செய்தார். நாட்ட காப்பாத்தனும் அட அதவிடுங்க, வீட்ட எப்படி காப்பாத்தப் போறாங்க என கேள்வி எழுப்பினார் டிஜிபி வன்னிய பெருமாள்.
சிறு வயதில் தன்னுடைய நண்பர் 10-ம் வகுப்பு படித்து வந்த பெண்ணை காதலித்தார் என்றும், ஆனால் அவர் படிப்பில் குறைவான மதிப்பெண் வாங்கியதால், காதலித்த பெண்ணை எப்படி மணம் முடிப்பது என்றிருந்த நிலையில், படிப்பதே அந்த பொண்ணுக்காகத் தான் என சொல்லிய அந்த நண்பர்., தற்போது நல்ல முறையில் படித்து, திருமணம் முடித்து நல்ல நிலையில் உள்ளதாக குறிப்பிட்டதோடு, அது போல் தமக்கு அமையவில்லையே என ஆதங்கம் தெரிவித்தார்.
பிரசிடென்சி கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் தவம் இருக்க வேண்டும் . ஜாலியாக இருக்க வேண்டிய மாணவப் பருவத்தில் சாமியாராக இருக்க வேண்டும் என்பதல்ல அர்த்தம். எண்ணங்களை உயர்வாக வைத்து,
கல்லூரி வாழ்க்கையை தவமாக மேற்கொண்டால் லட்சியத்தை அடையலாம் என்று குறிப்பிட்டார். ஒருசில மாணவர்கள் ரவுடித்தனம், ராகிங், அடாவடி செய்வதால் கடைசியில் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று எச்சரித்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu