RECENT NEWS

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

"மதுரை மாநாட்டுக்குப் பின் விஜயை முதலமைச்சராக ஏற்பார்கள் மக்கள்" - என்.ஆனந்த்

Aug 09, 2025

தமிழ்நாடு

அடங்க மறுத்து ஊழியரிடம் அத்துமீறிய விசிக கவுன்சிலர் சிறையில் கம்பி எண்ணுகிறார்..! சட்டையை கழட்டியும் பலனில்லை

Aug 09, 2025 01:27 AM

96

அடங்க மறுத்து ஊழியரிடம் அத்துமீறிய விசிக கவுன்சிலர் சிறையில் கம்பி எண்ணுகிறார்..! சட்டையை கழட்டியும் பலனில்லை

அடங்க மறுத்து ஊழியரிடம் அத்துமீறிய விசிக கவுன்சிலர் சிறையில் கம்பி எண்ணுகிறார்..! சட்டையை கழட்டியும் பலனில்லை

கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக ஊழியர் மீது தாக்குதல் நடத்திய விசிக கவுன்சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன் . 7ந்தேதி மாலை இவர் பணியில் இருந்தபோது பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புவனகிரி பேரூராட்சி 1 வது வார்டு கவுன்சிலர் பாரதிதாசன் என்கிற காளிமுத்து தனது வார்டில் செய்யப்பட்ட பணிகளுக்காக ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்குவதற்கு வசதியாக விரைவாக பில் தயார் செய்யும்படி கூறியுள்ளார்.

அப்போது ராதாகிருஷ்ணன் வேறு ஒரு முக்கியமான பணியில் இருந்ததால் மாலையில் அதை தயார் செய்கிறேன் எனக் கூறியுள்ளார். மாலையிலும் பில் தயார் செய்து தராததால், வாக்குவாதம் ஏற்பட்டதில் பொறுமை இழந்த கவுன்சிலர் பாரதிதாசன் , பேரூராட்சி ஊழியர் ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து முகத்தில் கையால் குத்தியதாக கூறப்படுகின்றது

அவரும் பதிலுக்கு விசிக கவுன்சிலரை மடக்கிப்பிடித்து கையால் குத்த, இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

இதையடுத்து தனக்கும் காயம் ஏற்பட்டதாக கூறி விசிக கவுன்சிலர் பாரதிதாசனும் சட்டையை கழற்றிவைத்துக் கொண்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சென்று அமர்ந்து கொண்டார்.

போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சிய பாரதிதாசன், தனது உடல் நிலை மேலும் சீரியஸ் ஆனது போல நடித்து அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நடக்க முடியாமல் செல்வது போல சென்று ஆம்புலன்ஸில் ஏறி படுத்துக் கொண்டார்.

இருந்தாலும் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கிவிட்டு, ஆள் கூட்டி வருவதாக ஆவேசமாக சென்ற பாரதிதாசன், நடிப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொதுவாக ஒப்பந்ததாரர்களுக்கு அவர்களின் பணி நிறை பெற்று விட்டதா ? சரியாக செய்துள்ளார்களா ? என்பதை சரி பார்த்த பின்னரே பில் மற்றும் பணம் வழங்கப்படும் என்றும், ஆனால் விசிக கவுன்சிலர் , சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பில்லை தயார் செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பேரூராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''6 பாகிஸ்தான் போர் விமானங்களை வீழ்த்தினோம்''.. இந்திய விமானப் படை தளபதி அறிவிப்பு..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies