முகப்பு
தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்.. கொலைப்பழியை ஏற்றுக்கொண்டு போலீஸில் சரணடைந்த தாய்..!
Aug 09, 2025 12:19 PM
101
மகன் செய்த கொலைக்காக போலீஸில் சரணடைந்த தாய்
சென்னையில் மகனை கொலை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் தாய் சரணடைந்த நிலையில் மூத்த மகனுக்காக கொலைப்பழியை அவர் ஏற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சூளைமேட்டில் கணவனை பிரிந்து வசித்து வந்த பிரமிளா, தனது இளைய மகன் முகில் போதையில் அடிக்கடி தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் அவரை கொலை செய்ததாக் கூறி வடபழனி போலீஸில் சரணடைந்தார். ஆனால், முகில் மீது விழுந்திருந்த 6 கத்தி வெட்டுகளும் ஆழம் அதிகமாக இருந்ததால் பிரமிளா இதனை செய்திருக்க முடியாது எனக் கருதி அவரிடம் விசாரித்தனர்.
அதில், தம்பியை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில் அவரது அண்ணன் வசந்தகுமாரும், நண்பர் கண்ணனும் சேர்ந்து கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. வசந்தகுமாருக்கு 2 மாதங்களில் திருமணம் நடைபெற இருப்பதால் கொலைப்பழியை தாய் பிரமிளா ஏற்றதாக தெரிவித்தார். இதனையடுத்து, வசந்தகுமார், கண்ணன் மற்றும் உடந்தையாக இருந்ததாக பிரமிளா கைது செய்யப்பட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu