RECENT NEWS

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

Aug 13, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

Aug 13, 2025

BIG STORIES

சென்னை பல்கலைக்கழக விடுதியில் மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு..!காதலன் போலீசில் சிக்கினான்

Aug 11, 2025 01:14 AM

229

சென்னை பல்கலைக்கழக விடுதியில் மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு..!காதலன் போலீசில் சிக்கினான்

சென்னை பல்கலைக்கழக விடுதியில் மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு..!காதலன் போலீசில் சிக்கினான்

கிண்டியில் உள்ள சென்னை பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள மாணவிக்கு பிறந்த குழந்தையுடன் காதலன் போலீசில் சிக்கினான்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு கட்டைப் பையுடன் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு வந்தார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், சாலையில் நடந்து வந்தபோது குழந்தை கீழே கிடந்ததாக அதை ஒப்படைத்தார்.

எந்த இடத்தில் குழந்தை கிடந்தது என போலீசார் விசாரித்த போது.. முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். போலிஷ் விசாரணையில் படிக்கின்ற வயதில் காதலில் விழுந்து எல்லை மீறியதால் நிகழ்ந்த விபரீதம் அம்பலமானது.

அவர், ஊட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பிரவீன் (வயது 21) என்பதும் சைதாப்பேட்டையில் தங்கி குரூப் ஒன் தேர்வுக்கு தயாராகி வருவதும் தெரிய வந்தது.

ஊட்டியில் தன்னுடன் கல்லூரியில் படித்த 21 வயது மாணவியுடன் காதல் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் விடுதியில் தங்கி எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒன்றாக இருந்ததன் விளைவாக மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முன்தினம் மாணவிக்கு விடுதியிலேயே ஆண் குழந்தை பிறந்தது.

மாணவியின் அறையில் இருந்த தோழிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் இந்த விவகாரம் விடுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டையில் உள்ள தனது காதலருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

பிறகு ஒரு கட்டை பையில் குழந்தையை எடுத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் வெள்ளிக்கிழமை முன்தினம் இரவு 10 மணிக்கு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் இருவரது குடும்பத்துக்கும் அவமானம்... இன்னும் லைஃபில் செட்டில் ஆகவில்லை என்பதால் குழந்தை கீழே கிடந்ததாக கூறி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விடலாம் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பிரவீன் மட்டும் சனிக்கிழமை மதியம் குழந்தையை கட்டை பையில் எடுத்து போட்டுக் கொண்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த போதுதான் திருவல்லிக்கேணி போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து மாணவியையும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

வீட்டிற்குள் பெண்ணை கட்டிபோட்டு ஆடைகளை களைந்து அட்டூழியம்.. வில்லங்க கொள்ளையால் பேரதிர்ச்சி..! இல்லத்தரசிகளே உஷார்.. எச்சரிக்கை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies