BIG STORIES
கராத்தே மாஸ்டரின் பாழடைந்த வீடு.. சிறுமிகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. தற்காப்புக்காக பெண் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்; நடந்த விபரீதம்!
Aug 11, 2025 02:59 AM
224
கராத்தே மாஸ்டரின் பாழடைந்த வீடு.. சிறுமிகள் கொடுத்த பகீர் வாக்குமூலம்.. தற்காப்புக்காக பெண் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்; நடந்த விபரீதம்!
போலீஸாருக்கு நடுவே, மஃப்டியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரியைப்போல, நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு, கையை பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக்கொண்டு ஸ்டைலாக, கெத்தாக நடந்து வரும் இவர்தான், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என வகுப்பு எடுப்பதுபோல், சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான, கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு...
தனியாக செல்லும்போது தங்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் ராட்சசன்களிடமிருந்து, தற்காத்துக்கொள்ளவும் எதிர்த்து தாக்கவும் தான், கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர்கள், அனுப்புகிறார்கள்.
அப்படி, நம்பிக்கையோடு அனுப்பும்போது, தற்காப்பு கலைகளைச் சொல்லிக்கொடுக்கும் மாஸ்டரே அத்து மீறினால்? அப்படியொரு, அவலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயது ஜெயின் மிலாடு. கராத்தே மாஸ்டரான இவர், தனது வீட்டு தோட்டத்தில் உள்ள மைதானத்தில் Goju-ryu ஒகினாவா என்ற பெயரில் கராத்தே அகாடமி நடத்தி வருகிறார்.
இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள், கராத்தே தற்காப்பு கலை பயின்று வருகின்றனர். சனிக்கிழமை அதிகாலை அந்த அகாடமியில் தற்காப்பு கலை பயின்று வரும் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியும் அவரது அக்காவான 11-ஆம் வகுப்பு படிக்கும் 16-வயது சிறுமியும் பயிற்சிக்காக சென்று வீடு திரும்பியுள்ளனர்.
பயிற்சிக்கு சென்று வீடு திரும்பிய 9-ஆம் வகுப்பு மாணவியான சிறுமி சோர்வுடன் காணப்பட்டதால், சிறுமியிடம் தாய் விசாரித்தபோது அதிகாலை பயிற்சிக்கு சென்ற தன்னை கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு ‘குட்டச், பேட்டச்’ பற்றி சொல்லித் தருவதாக, அவரது பழைய பாழடைந்த வீடிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தாயார் மூத்த மகளிடம் விசாரித்தபோது, கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு ஏற்கனவே தன்னையும் இப்படி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன தாயார் இக்கொடூரம் குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார், கராத்தே மாஸ்டர் ஜெயின் மிலாடு மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, சிறையில் அடைத்தனர்.
இச்சகோதரிகளைப் போல, இன்னும் வேறு எந்தெந்த சிறுமிகளிடம் கராத்தே மாஸ்டர் அத்துமீறியுள்ளார்? என்பது குறித்தும் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்து கொள்ள தற்காப்பு கலை பயில வந்த மாணவிகளை, வேலியே பயிரை மேய்ந்தது போல, கராத்தே மாஸ்டரே ‘குட்டச், பேட்டச், சொல்லித் தருவதாகக்கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu