RECENT NEWS

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

Aug 13, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

Aug 13, 2025

BIG STORIES

ஆடுகளை திருடிய சூனா பானாவை வெளுத்த உரிமையாளர்..! சந்தைக்கு போனதால் சங்கடம்

Aug 12, 2025 01:12 AM

490

ஆடுகளை திருடிய சூனா பானாவை வெளுத்த உரிமையாளர்..! சந்தைக்கு போனதால் சங்கடம்

ஆடுகளை திருடிய சூனா பானாவை வெளுத்த உரிமையாளர்..! சந்தைக்கு போனதால் சங்கடம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 16 ஆடுகளை திருடி சந்தைக்கு விற்க கொண்டு சென்ற ஆடு களவாணிகளை கையும் களவுமாக, பிடித்த உரிமையாளர் அவர்களின் கைகளை கட்டி ஆடுபோல இழுத்துச்சென்று போலீசில் ஒப்படைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கனிகாரன் கொட்டாய் பகுதியில் கோலந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் ஆடு மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்து இரவு நேரங்களில் அதே பகுதியில் கொட்டகை அமைத்து தங்களது 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.

இதை நோட்டமிட்ட தனிகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் 16 ஆடுகளை திருடி டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றிச்சென்று விட்டனர். ஆடுகள் களவு போனதை அறிந்து பதறி போன தங்கவேலு, தனது ஆடுகள் அருகில் உள்ள சந்தையில் விற்கப்படுகின்றதா? என்பதை கண்காணித்து வந்தார். இந்த நிலையில் களவாடியவன் காவல் நிலையத்தில் ஒழிந்தான் என்பது போல , திருடிய 16 ஆடுகளையும் விற்பதற்கு ஆடு வியாபாரிகள் அதிகமாக வரும் சந்தைக்கு கொண்டு சென்றதால் ஆடு களவாணிகள் 4 பேரும் கையும் களவுமாக தங்கவேலுவிடம் சிக்கினர்.

4 பேரையும் பிடித்து வெளுத்த தங்கவேலு, அவர்களை ஆடுகளை கட்டி இழுத்து செல்வது போல கைகளை கயிற்றால் கட்டி இழுத்துச்சென்றார்

ஆடுகளை திருடி கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏசி உடன் 4 பேரையும் செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கம் காவல்துறையினர், தனிகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அஜித் ,சதீஷ் ,மனோஜ் ,பிரசாந்த் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆடு மற்றும் மாடு வளர்க்கும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

வீட்டிற்குள் பெண்ணை கட்டிபோட்டு ஆடைகளை களைந்து அட்டூழியம்.. வில்லங்க கொள்ளையால் பேரதிர்ச்சி..! இல்லத்தரசிகளே உஷார்.. எச்சரிக்கை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies