RECENT NEWS

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

Aug 13, 2025

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த முடிவு.. மீண்டும் முதல் மனைவியுடன்?... வெளியான புதிய அப்டேட்!

Aug 13, 2025

BIG STORIES

காதலை முறித்த மாணவி.. கல்லூரி படிப்பே போச்சு.. கதறும் நிலைக்கு யார் காரணம்..?

Aug 12, 2025 01:51 AM

306

காதலை முறித்த மாணவி.. கல்லூரி படிப்பே போச்சு.. கதறும் நிலைக்கு யார் காரணம்..?

காதலை முறித்த மாணவி.. கல்லூரி படிப்பே போச்சு.. கதறும் நிலைக்கு யார் காரணம்..?

காதலை முறித்த மாணவியின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு அந்த மாணவி கல்லூரிக்கே செல்ல இயலாத நிலையை ஏற்படுள்ளது... மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டிய காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தால் உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத முடிவை முயற்சித்த நிகழ்வும் அரங்கேறி உள்ளது... பிளாக்மெயில் காதலனின் விபரீத செயல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் பர்கூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் உறவினரான போச்சம்பள்ளி அடுத்த மேட்டுப்புலியூர் கிராமத்தை சேர்ந்த துரை- உஷாராணி தம்பதியரின் மகன் சந்துரு என்பவரும் நண்பராக பழகி வந்துள்ளனர். பி.எஸ்.சி. முடித்து விட்டு வீட்டில் இருந்து வரும் சந்துருவிற்கும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்து வீட்டில் இருந்த சந்துருவிற்கு, தங்கை உறவு முறையான கல்லூரி மாணவி, போனில் ஆறுதல் கூறிவந்துள்ளார். அளவுக்கு அதிகமாக ஆறுதல் கூறியதாலோ என்னவோ அண்ணன் தங்கை முறையை மறந்து இருவருக்கும் இடையே விபரீத காதல் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரும் மணிக்கணக்கில் போனிலும் பேசி வந்துள்ளனர். இவர்களின் தெய்வீக காதல் குறித்து கல்லூரி மாணவியின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு தெரிய வர, ஏய் என்னடி வேலை செஞ்சிருக்க, அவன் உனக்கு அண்ணன் முறை வேணும்டி, எனக்கூறி கல்லூரி மாணவியை கண்டித்துள்ளனர்.

அதனால் மாணவி சந்துருவிடம் பேசுவதை அந்த மாணவி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் சந்துரு, அதெல்லாம் முடியாது என்னிடம் பேசு, இல்லையென்றால் நாம தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோக்களை எல்லோருக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார். சந்துரு விளையாட்டுக்குத்தான் சொல்வதாக நினைத்த கல்லூரி மாணவி, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் எனக்கூறியுள்ளார். ஆனால் சந்துரு, கல்லூரி மாணவியின் தோழி ஒருவருக்கு தனிமையில் இருந்த வீடியோவின் ஸ்கீரின் ஷாட்டை அனுப்பியதுடன், பேசவில்லை என்றால் இன்னும் நிறைய வீடியோ உள்ளது அனைத்தையும் எல்லோருக்கும் அனுப்பி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவியோ, இப்படி எல்லாம் பண்ணாத, எதுவாக இருந்தாலும் நாம பேசி தீர்த்துக்கலாம் என கெஞ்சியுள்ளார். ஆனால் சந்துருவோ,ஏற்கனவே இருவரும் தனிமையில் இருந்த நேரத்தில் கல்லூரி மாணவியின் செல்போனில் இருந்த அனைத்து செல்போன் எண்களையும் தனது செல்போனிற்கு மாற்றியதாகவும், அந்த செல்போன் எண்களுக்கு எல்லாம் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பி உள்ளார். பின்னர் இது குறித்து கல்லூரி மாணவிக்கு தோழிகள் மற்றும் உறவினர்கள் கேட்க, ஏதோ மார்ப்பிங் தான் செய்திருப்பான் என்று பார்த்தால், உண்மையாகவே தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து அனுப்பியதாக கல்லூரி மாணவி வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி, நடந்த சம்பவத்தை புகாராக கொடுத்துள்ளார். ஆனால் போலீசாரோ விசாரணை நடத்தி, இனிமேல் இது போன்று செய்யமாட்டான் என எழுதி கொடுத்திருக்கிறான், நீயும் எழுதி கொடுத்திடு என சமாதான படுத்தி, மாணவிக்கு தைரியம் கொடுத்ததால் மாணவியும் எழுதி கொடுத்துள்ளார். மேலும் இருவரின் செல்போன்களையும் போலீசார் பிளாஷ் செய்து அதில் உள்ள அனைத்தை வீடியோக்களையும் அழித்து விட்டு 3 நாட்கள் கழித்து செல்போனை அவரவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் சந்துருவோ தனிமையில் இருந்த வீடியோக்களை தன் லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்துள்ளார். அந்த வீடியோக்களை ஒருவாரம் கழித்து கல்லூரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், உடன் படிக்கும் சக தோழிகள், மாணவி படிக்கும் கல்லூரி முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கு சந்துரு அனுப்பியுள்ளார். உடனே கல்லூரி மாணவி மீண்டும் கிருணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று, வீடியோக்களை எல்லோருக்கும் அனுப்பி வருகிறான் என கூறியுள்ளார். ஆனால் போலீசாரோ, நீ கண்டுக்காம விட்டுடுமா, அவனே அனுப்பி அனுப்பி பார்த்து போர் அடித்து போய் விட்டுடுவான் என கூறியுள்ளனர். செய்வதறியாது திகைத்த கல்லூரி மாணவி விட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் சந்துருவோ தினம் தினம் வீடியோக்களை அனைவருக்கும் அனுப்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவியை மீட்ட பெற்றோர்கள் ஆறுதல் கூறி தைரியம் கொடுத்துள்ளனர்.

மேலும் சந்துருவின் அக்காவிற்கு நடந்ததை எல்லாம் மாணவி கூறி வீடியோக்களை அழிக்க சொல்லியிருக்கிறார். அதற்கு சந்துருவின் அக்காவோ, நாங்கள் கேட்டால் அவன் எங்களையே அடிக்கிறான், எங்களால் அவன் லேப்டாப்ப்பில் உள்ளதை அளிக்க முடியாது, 24 மணி நேரமும் அவன் லேப்டாப் கிட்டேயே இருக்கிறான். எங்களால் எதுவும் முடியாது என மறுத்துனர். அவ்வளவு நடந்தும் ஆத்திரம் தீராத சந்துரு, கல்லூரி மாணவியின் பெயரிலேயே போலியாக இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி, அதில் பாலோவர்ஸ்களை சேர்த்து, இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் அனைத்திலும் சந்துரு முகம் தெரியாத மாதிரி, மாணவியின் முகம் தெரியும் படியான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இதனால் வெளியே வர முடியாமல் இருப்பதாக கண்ணீர் மல்க கல்லூரி மாணவி கூறினார்.

கல்லுரியில் உள்ள ஆசிரியர்களும் போன் செய்து, என்ன இது இப்படி இருக்கு ? என கேட்டதுடன், உன்னால் எங்கள் கல்லூரிக்கே கெட்ட பேரு, இனிமே காலேஜிக்கே வராத எனவும் கூறுவதாகவும் இதனால் கல்லூரியை விட்டே நின்றுவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் மாணவி தனது அக்கா, அம்மா மற்றும் உறவினர்களுடன் சந்துருவின் வீட்டிற்கு சென்று லேப்டாப்பில் உள்ள ஆதாரத்தை அளித்து விடலாம் என முடிவெடுத்து கடந்த 10ம் தேதி காலை மேட்டுப்புலியூர் பகுதியில் சந்துருவின் வீட்டிற்கு சென்று லேப்டாப் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு திரும்பும் போது சந்துரு கையில் அரிவாளுடன் சென்று அங்கிருந்த பெண்களை தலை, கை கால் உள்ளிட்ட பகுதியில் தாக்கியதாக கூறப்படுகின்றது

இதில் காயமடைந்த அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் சந்துருவும் தன்னை தாக்கியதாக கூறி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, அடிதடி வழக்கு மட்டும் நாங்கள் பதிவு செய்கிறோம், மீதமுள்ளதை கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பார்த்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

ஒருவன், உறவினர் என்று நம்பி பழகிய மாணவியை ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு அதனை ஊருக்கே அனுப்பி வைக்கிறான், தடுத்தவர்களை அரிவாளால் வெட்டுகிறான் இத்தனையும் செய்த ஒருவன் மீது சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் பேசி அனுப்பி வைத்த கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசாரால் ஒரு பெண், கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

காவல் உயர் அதிகாரிகள் அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவதோடு, மாணவி எந்த ஒரு மிரட்டலும் இன்றி தொடர்ந்து தைரியமாக கல்லூரி சென்று வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காதலிக்கும் போது இணக்கமாக இருந்ததை படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டினாலும், பெண்ணின் அந்தரங்க படத்தை பொது வெளியில் பகிர்ந்தாலும் அது பெருங்குற்றம் அந்த குற்றம் கேடு தரும்..!

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

வீட்டிற்குள் பெண்ணை கட்டிபோட்டு ஆடைகளை களைந்து அட்டூழியம்.. வில்லங்க கொள்ளையால் பேரதிர்ச்சி..! இல்லத்தரசிகளே உஷார்.. எச்சரிக்கை..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies